| முத்தி இலம்பகம் |
1643 |
|
|
| 2907 |
வாய்ப்பட லின்றிப் பொன்றும் | |
| |
வல்லனாய் மன்னன் கொள்ளி | |
| |
னீத்தநீர் ஞால மெல்லா | |
| |
நிதிநின்று சுரக்கு மன்றே. | |
| |
|
|
(இ - ள்.) நாளும் வரிசையின் அரிந்து காய்த்த நெல் கவளம் தீற்றின் - நாடோறும் முறைமைப்படி அரிந்து, காய்த்த நெல்லாகிய கவளத்தைக் களிற்றிற்குத் தீற்றினால்; வாய்ப்படும் - அதற்கு உணவும் ஆம்; கேடும் இன்றாம் - அழிவும் இன்றாகும்; களிறுதான் கழனி மேயின் - அங்ஙனம் தீற்றாத களிறு கழனியிலே தானே சென்று மேய்ந்தால்; வாய்ப்படல் இன்றிப் பொன்றும் - உணவாதலின்றி அழிந்துவிடும், மன்னன் வல்லனாய்க் கொள்ளின் - அரசன் கொள்ள வல்லனாகி முறைமையாற் கொண்டால்; நீத்த நீர் ஞாலம் எல்லாம் நின்று நிதி சுரக்கும் - கடலாகிய நீர் சூழ்ந்த உலகம் அவன் வழிநின்று செல்வத்தைக் கொழிக்கும்.
|
|
(வி - ம்.) ”காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
|
| மாநிறை வில்லதம் பன்னாட் காகும் |
|
| நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே |
|
| வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் |
|
| அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே |
|
| கோடி யாத்து நாடுபெரிது நந்தும் |
|
| மெல்லியன் கிழவ னாகி வைகலும் |
|
| வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு |
|
| பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் |
|
| யானை புக்க புலம் போலத் |
|
| தானும் உண்ணான் உலகமும் கெடுமே” (புறநா.184) |
|
|
என்பதை இப் பகுதியுடன் ஒப்பிடுக.
|
( 309 ) |
| 2908 |
நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா | |
| |
நீருயி ரிரண்டுஞ் செப்பிற் | |
| |
புல்லுயிர் புகைந்து பொங்கு | |
| |
முழங்கழ விலங்கு வாட்கை | |
| |
மல்லலங் களிற்று மாலை | |
| |
வெண்குடை மன்னர் கண்டாய் | |
| |
நல்லுயிர் ஞாலந் தன்னு | |
| |
ணாமவே னம்பி யென்றான். | |
|
|
(இ - ள்.) மாந்தர்க்கு எல்லாம் நெல் உயிர், நீர் உயிர் - உலக மக்கட்கெல்லாம் நெல்லும் உயிர், நீரும் உயிர்; செப்பின் இரண்டும் புல்லுயிர் - ஆராய்ந்துரைப்பின் இவ்விரண்டும் சிறந்த
|