| முத்தி இலம்பகம் |
1645 |
|
|
|
(இ - ள்.) நாந்தக உழவர் ஏறே! - வாள்வீரர் தலைவனே!; வேந்தர் தாம் ஆய்ந்த அறிவு அருளொடு உடையர் ஆகி - அரசர் ஆராய்ந்த அறிவும் அருளும் உடையவராகி; காய்ந்து எறி கடுங்கல் தன்னைக் கவுள் கொண்ட களிறு போல - ஒருவனைச் சினந்து எறியும் கடிய கல்லைக் காலம் வருமளவும் கவுளிலே மறைத்து வைத்த களிறுபோல; வெகுளி மாற்றி விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் - பகைவர்மேற் சென்ற சினத்தை மாற்றி விரும்புமவற்றையெல்லாம் (கொடுத்து) அவரை அழிக்கும் எண்ணத்தை மறைப்பது; நன்பொருளாவது என்றான் - அவர்க்கு நல்ல பொருளாவது என்றான்.
|
|
(வி - ம்.) 'களிறுகவுள் அடுத்த எறிகல் போல - ஒளித்த துப்பினை' (புறநா. 30) என்றார் பிறரும்.
|
| ”பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து) |
|
| உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.” (478) |
|
|
எனவும்,
|
| ”காதல காதல் அறியாமை யுய்க்கிற்பின் |
|
| ஏதில ஏதிலார் நூல்.” (440) |
|
|
எனவும் எழுந்த திருக்குறள்கள் ஈண்டு நினையற்பாலன.
|
( 312 ) |
| 2911 |
குடிபழி யாமை யோம்பிற் | |
| |
கொற்றவேன் மன்னர் மற்று | |
| |
னடிவழிப் படுவர் கண்டா | |
| |
யரும்புகழ் கெடுத லஞ்சி | |
| |
நொடியலோ ரெழுத்தும் பொய்யை | |
| |
நுண்கலை நீத்த நீந்திக் | |
| |
கொடியெடுத் தவர்க்கு நல்கு | |
| |
கொழித்துணர் குமர வென்றான். | |
|
|
(இ - ள்.) கொழித்து உணர் குமர! - தீமையை நீக்கி நன்மையை உணர்கின்ற குமரனே!; குடி பழியாமை ஓம்பின் - குடிமக்கள் இகழாமற் காப்பாயெனின்; கொற்றவேல் மன்னர் உன் அடிவழிப் படுவர் கண்டாய் - வெற்றிவேல் வேந்தர் நின்னுடைய அடியிடத்தே வீழ்வார்காண்; அரும்புகழ் கெடுதல் அஞ்சி ஓர் எழுத்தும் பொய்யை நொடியல் - அரிய புகழ் அழிவதை அஞ்சி ஓரெழுத்தேனும் பொய்ம்மொழி புகலாதே; நுண்கலை நீத்தம் நீந்திக் கொடி எடுத்தவர்க்கு நல்கு என்றான் - நுண்ணிய கலைகளாகிய கடலை நீந்தி வென்றிக்கொடி எடுத்த அமைச்சர்க்கு எப்போதும் அருள்செய் என்றான்.
|