| முத்தி இலம்பகம் | 
1657  | 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'நல்வினை காண்மின்' என்றான் 'நல்வினை செய்தாற் கூற்றைத் தப்பிப் போதலுங் கூடும்' எனற்கு. 
 | 
| ”கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் | 
 | 
| ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.” (குறள், 369) | 
 | 
| 
    என்பது பற்றிப் ”புள்ளுவர்கையினும் உய்யும் புள்ளுள” என்று எடுத்துக்காட்டி அதுபோல யாமும் நல்வினைசெய்தால் கூற்றம் குதித்தலும் கூடும் என்றான் என்க. ஓள்ளியான் - அறிவுடையான். உரைத்தது என்றது, பயனின்றாக உரைத்தது என்பதுபட நின்றது. அறத்தினைச் சொல்லளவாகவே கருதி விடாமல் நுங்கள் ஒழுக்கத்தினும் மேற்கொண்மின் என்பதாம். 
 | 
( 333 ) | 
|  2932 | 
மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலுந் |   |  
|   | 
தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால் |   |  
|   | 
வாய்புகப் பெய்யினும் வழுக்கி னல்லறங் |   |  
|   | 
காய்வது கலதிமைப் பால தாகுமே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையை - இறத்தலும் பிறத்தலும் வளர்ந்து பருத்தலும் தேய்தலும் யாக்கை உடைமையை; திங்கள் செப்பும் - திங்கள் அறியாதாருக்கும் கூறும்; நல்லறம் வாய் புகப்பெய்யினும் - நல்லறத்தைச் செவியிலே புகும்படி சொரியினும்; வழுக்கிக் காய்வது - அதனைக் கைவிட்டு வெறுப்பது; கலதிமைப் பாலது - தீவினையின் கூறாகும். 
 | 
| 
    (வி - ம்.) திங்கள் காட்டக் கண்டும், அறத்தைச் சொரியக் கேட்டும் கைவிடுவது தீவினையின் பாலதாம் என்று கொள்க. 
 | 
| 
    ”தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் - மாய்தலுண்மையும் பிறத்த லுண்மையும் - அறியாதோரையும் அறியக் காட்டித் - திங்கட்புத்தேள் திரிதரும் உலகத்து” (புறநா. 27) என்றார் பிறரும். 
 | 
( 334 ) | 
|  2933 | 
புள்ளிநீர் வீழ்ந்தது பெருகிப் புன்புலா |   |  
|   | 
லுள்வளர்ந் தொருவழித் தோன்றிப் பேரற |   |  
|   | 
முள்குமேன் முழுப்புலாற் குரம்பை யுய்ந்துபோய் |   |  
|   | 
வெள்ளநீ ரின்பமே விளைக்கு மென்பவே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புள்ளி நீர் வீழ்ந்தது - சுக்கிலம் கருப்பைக் குள்ளே வீழ்ந்தது; உள் பெருகிப் புன்புலால் வளர்ந்து - உள்ளே பெருத்துப் புன்மையான ஊன் வளர்ந்து; ஒரு வழித் தோன்றி - புக்க வழியாலே புறப்பட்டு; பேர் அறம் உள்குமேல் - அறிவு பெற்று அறத்தை நன்றென்று கொள்ளுமாயின்; முழுப்புலால் குரம்பை உய்ந்து போய் - (அது) முற்றும் ஊனாலாகிய கூட்டை 
 |