பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1661 

பொழுதே குழைந்து மயங்கி; தளர்ந்து கண் பரப்பி நோக்கி - சோர்ந்து கண்ணை விரித்துப் பார்த்து; பனித்தும் என்று - நடுங்குவோம் என்று எண்ணி; உற்ற போழ்தே தனிச்சித்தம் வைத்தல் தேற்றாம் - அறிவு உற்ற போதே தனித்த சித்தத்தை நிலைபெற வைத்தலைத் தெளியோம்; பழுதுஇலா அறிவின் என் ஆம்? - குற்றமற்ற அறிவினால் யாது பயன்?

   (வி - ம்.) 'அனிச்சத்தம் போதுபோல' என்பதன்பின் 'வாடும்' என ஒரு சொல் வருவிக்க.

( 341 )
2940 நீனிறங் கொண்ட வைம்பா
  னிழன்மணி யுருவ நீங்கிப்
பானிறங் கொண்டு வெய்ய
  படாமுலை யையிற் றூங்கி
வேனிற மழைக்கண் டாமு
  மிமைகுறைந் தழுகி மேனி
தானிறங் கரக்குங் காலந்
  தையலீர் மெய்ய தன்றே.

   (இ - ள்.) தையலீர்! - மங்கையிரே!; நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல்மணி உருவம் நீங்கி - நீல நிறம் கொண்ட கூந்தல் தன்னுடைய ஒளிவிடும் அந் நீலநிறத்தை விட்டு; பால் நிறம் கொண்டு - பால்போல வெண்ணிறம் பெற்று; வெய்ய படாமுலைபையின் தூங்கி - விருப்பூட்டுஞ் சாயாத முலைகள் பைபோலத் தொங்கி; வேல்நிற மழைக்கண் தாமும் இமைஅழுகிக் குறைந்து - வேலென ஒளிரும் மழைக்கண்களும் இமை அழுகி ஒளி குறைந்து - மேனிதான் நிறம் கரக்கும் காலம் மெய்யது - மேனியும் ஒளி மறையும் முதுமைக் காலமும் வருவது மெய்யானது.

   (வி - ம்.) நீல் - நீலம் : கடைக்குறை. ஐம்பால் - கூந்தல். நிழல் - ஒளி; மணி ஈண்டு நீலமணி உருவம் - நிறம். பை - தோற்பை. அதற்கு முன்னே துறப்பீராக என்பது குறிப்பெச்சம்.

( 342 )

வேறு

2941 குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கம
ழஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடா
மிஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலா
லஞ்சினேன் றுறப்பல்யா னார்வ மில்லையே.

   (இ - ள்.) குஞ்சரம் அயா உயிர்த்த அனைய - யானை கொட்டாவி விட்டாற் போன்ற ; குய்கமழ அம் சுவை அடிசிலை