| முத்தி இலம்பகம் | 
1666  | 
 | 
  | 
| 
 முலை வருடிச் சேந்து - பெரிய முலைகளைத் தடவிச் சிவந்து; காதல் கொண்டு இருந்த காமர் கைவிரல் -அன்புகொண்டிருந்த அழகிய கைவிரல்களே; அளிய நீரும் ஏதிலர் ஆகி - எம்மை அருளத்தக்க நீரும் எமக்கு அயலாராகி; கோமான் எண்ணமே எண்ணினீர் - அரசன் நினைவையே நினைத்தீர்! (இது தகுமோ?) 
 | 
| 
    (வி - ம்.) 'செந்தீக்கடவுளை வலஞ்செய்து அது சான்றாக நும்மைப் பாதுகாப்பே மென்று எம் கைகளைப் பற்றின நீரும்' என்றலின் உம்மை உயர்வு சிறப்புப்பொருளது. 
 | 
( 350 ) | 
|  2949 | 
பஞ்சிகொண் டெழுதி யார்ந்த |   |  
|   | 
  சீறடி பனித்த லஞ்சிக் |   |  
|   | 
குஞ்சிமே லேற்ற கோமான் |   |  
|   | 
  கொப்புளித் திட்ட வெம்மை |   |  
|   | 
வஞ்சித்தீர் மணிசெய் தோள்காள் |   |  
|   | 
  வாங்குபு தழுவிக் கொள்ளீர் |   |  
|   | 
நெஞ்சநீர் வலியீ ராகி |   |  
|   | 
  நிற்பிரோ நீரு மென்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மணிசெய் தோள்காள்! அணியணிந்த தோள்களே!; பஞ்சி கொண்டு எழுதி - செம்பஞ்சிக் குழம்பினால் எழுதி; ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி - (அழகு) நிறைந்த சிற்றடிகள் (மெய்யிற்படின்) நடுங்குமென்றஞ்சி; குஞ்சிமேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை - தலையில் ஏற்ற அரசன் இனி நுகரேன் என்று கைவிட்ட எம்மை; நீர் வாங்குபு தழுவிக்கொள்ளீர் - நீர் அணைத்துத் தழுவிக்கொள்ளீர்; நீரும் நெஞ்சம் வலியீர் ஆகி நிற்பிரோ? - நீரும் உள்ளம் வலியீராகி நிற்பீரோ?; வஞ்சித்தீர் - (கைகள் எம்மைப் பற்றித் தெளிவிக்கும்போது உடனிருந்துதவிய நீவிர்) உண்மை கூறாமல் ஏமாற்றினீர். 
 | 
| 
    (வி - ம்.) 'நெஞ்சின்' என்ற பாடத்திற்கு 'நெஞ்சுபோல்' என்று உரை கூறுக. நீரும் : உம் : உயர்வு சிறப்பி 
 | 
( 351 ) | 
|  2950 | 
முட்டுவட் டனைய கோல |   |  
|   | 
  முத்துலாய்க் கிடந்து மின்ன |   |  
|   | 
மட்டுவிட் டலர்ந்த கோதை |   |  
|   | 
  மதுவொடு மயங்கி நாளு |   |  
|   | 
மொட்டியிட் டுறைய வெங்கட் |   |  
|   | 
  குயரணை யாய மார்ப |   |  
|   | 
நட்புவிட் டொழியு மாயி |   |  
|   | 
  னன்மையார் கண்ண தம்மா. |   | 
 
 
 |