பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1678 

2970 அழலார் சுரையெயிற்று வெஞ்சினவைந்
  தலைசுமந்த வெகுளி நாக
நிழலார் திருமணியுந் தேவர்
  திருமுடிமே னிலவி வீசுஞ்
சுழலார் பசும்பொன்னும் வேய்ந்து
  சொரிகதிர்மென் பஞ்சி யார்ந்த
கழலா னகர மமுது
  கடைகடல்போற் கலங்கிற் றன்றே.

   (இ - ள்.) அழல் ஆர் சுரை எயிற்று வெஞ்சின வெகுளி நாகம் - நஞ்சு பொருந்திய குழல்போன்ற பற்களையும் வெஞ்சின வெகுளியையும் உடைய நாகத்தின், ஐந்தலை சுமந்த நிழல் ஆர் திருமணியும் - ஐந்தலையிலே சுமந்த, ஒளி நிறைந்த அழகிய மணியும், தேவர் திருமுடிமேல் நிலவி வீசும் சுழல் ஆர் பசும்பொன்னும் - (இனி வணங்கும்) வானவர் திருமுடிமேல் விளங்கி வீசும் சுழலும் ஒளியுடைய புதிய பொன்னணியும்; வேய்ந்து - அணிந்து; கதிர் சொரி மென் பஞ்சி ஆர்ந்த கழலான் - ஒளி வீசும் மென்மையான பஞ்சுபோல் மென்மை நிறைந்த கழலானின்; நகரம் அமுது கடை கடல்போல் கலங்கிற்று - நகரம் அமுது கடையுங் கடல்போலக் கலங்கியது.

   (வி - ம்.) வானவர் வணங்குதல், இனிமேல் சீவகனடையும் சிறப்பு, 'சுழலார் வானவர்' எனக்கூட்டி 'வலம்வரும் வானவர்' எனப்பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

( 372 )

25.நகர விலாவணை

வேறு

2971 நீர்நிறை குளத்து மாரி
  சொரிந்தென நறுநெய் துள்ளு
நோ்நிறை பொரியுங் குய்யும்
  வறைகளு நிவந்த வாசம்
பார்நிறை யடிசிற் பள்ளி
  தளியொடு சாலை யெல்லா
மூர்நிறை யுயிர்த்த லின்றி
  யுயிர்சென்ற போன்ற வன்றே.

   (இ - ள்.) பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம் - உலகு நிறைந்த புகழையுடைய அட்டில்களிலும் கோயில்களிலும் சோறிடுஞ் சாலைகளிலும் ஆக எங்கும்; நீர் நிறை