(வி - ம்.) உள்ளாள், தேற்றாள்: முற்றெச்சங்கள். அன்பு மிகுதியாற் கையாறு முற்படுதலின், 'இறுகி' (சீவக. 299) எனக் கையாறு கூறி, 'இரங்கி' எனக் கவலை கூறி, 'ஏங்கி' என அரற்றுக் கூறி, 'அச்சம் உள்ளாள்' என அவலங் கூறினார். வருத்தம் தோன்றி நிற்றல், அவலம் வாய்விட்டழுதல், அரற்று. யாது செய்வல் என்றல், கவலை. மூர்ச்சித்தல், கையாறு.
|
|