| முத்தி இலம்பகம் |
1686 |
|
|
|
இச் செய்யுளோடு,
|
| ”பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் |
|
| ஒருபகல் எழுவர் எய்தி யற்றே |
|
| வையமும் தவமுந் தூக்கின் தவத்துக்(கு) |
|
| ஐயவி யனைத்தும் ஆற்றா தாகலின் |
|
| கைவிட் டனரே காதலர் அதனால் |
|
| விட்டோரை விடாஅள் திருவே |
|
| விடாஅ தோரிவள் விடப்பட் டோரே” |
|
|
எனவரும் புறநானூற்றுச் செய்யுளை (358) ஒப்புநோக்குக.
|
( 385 ) |
| 2984 |
உப்பிலிப் புழுக்கல் காட்டுட் | |
| |
புலைமக னுகுப்ப வேகக் | |
| |
கைப்பலி யுண்டி யானும் | |
| |
வெள்ளின்மேற் கவிழ நீரு | |
| |
மைப்பொலி கண்ணி னீரான் | |
| |
மனையக மெழுகி வாழ | |
| |
விப்பொருள் வேண்டு கின்றீ | |
| |
ரிதனைநீர் கேண்மி னென்றான். | |
|
|
(இ - ள்.) காட்டுள் உப்பு இலி புழுக்கல் புலைமகன் உகுப்ப - சுடுகாட்டிலே உப்பு இல்லாத சோற்றைப் புலைமகன் நீருடன் சொரிய; யானும் ஏகக் கைப்பலி உண்டு வெள்ளில்மேல் கவிழ - யானும் அவன் ஒற்றைக் கையால் இட்ட அப் பலியை உண்டு பாடையின்மேற் கவிழ; நீரும் மைப்பொலி கண்ணின் நீரால் மனையகம் மெழுகி வாழ - நீவிரும் மைவிளங்கும் கண்ணீரினால் வீட்டை மெழுகி வாழ; இப்பொருள் வேண்டுகின்றீர் - இப் பயனில்லாத பொருளை விரும்புகின்றீர்; நீர் இதனைக் கேண்மின் என்றான் - (அதனை விட்டு) நீவிர் இப் பயனுறு பொருளைக் கேண்மின் என்றான்.
|
|
(வி - ம்.) இக் காலத்திற் 'புலைமகன்' என்பான் 'வெட்டியான்' எனப்படுகின்றான். ”புலைமகன் என்றார் புரோகிதனை; அவன் தன் குலத்திற்குரியன செய்யாது, அரசன் குலத்திற்குரிய தொழில்களை மேற்கொண்டு நிற்றலின்; 'புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு' (புறநா. 360) என்றும், 'இழிபிறப்பினோன் ஈயப்பெற்று' (புறநா. 363)என்றும் பிறருங் கூறினார்; நாவிதனுமாம்” என்பர் நச்சினார்க்கினியர். கவிழ்தல் - முற்றுங்கெடுதல். (இறத்தல்)
|
( 386 ) |
| 2985 |
கொல்சின யானை பார்க்குங் | |
| |
கூருகிர்த் தறுக ணாளி | |
| |
யில்லெலி பார்த்து நோக்கி | |
| |
யிறப்பின்கீ ழிருந்த லுண்டே | |
| |
பல்வினை வெள்ள நீந்திப் | |
| |
பகாவின்பம் பருகி னல்லா | |
| |
னல்வினை விளையு ளென்னு | |
| |
நஞ்சினுட் குளித்த லுண்டே. | |
|