பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1705 

3020 தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழத்
  துளும்பா திருந்த திங்கள்போன்
முழுதும் வைய முடனேத்த
  முதுவாய் வலவை யாயிருந்
தழுது வினைக ளல்லாப்ப
  வறைந்தோய் நின்சொ லறைந்தார்கள்
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்
  பல்லாண் டெல்லாம் பரியாரே.

   (இ - ள்.) தொழுதிப் பன்மீன் குழாஞ்சூழ - தொகுதலையுடைய பல மீனின் திரள் சூழ; துளும்பாதிருந்த திங்கள்போல் - அசையாதிருந்த திங்களைப் போல; வையம் முழுதும் உடன் ஏத்த - உலகமெல்லாம் ஒருங்கே வாழ்த்த; முதுவாய் வலுவாய் இருந்து - முதிய உண்மையால் வெற்றியுடையை ஆக இருந்து; வினைகள் அழுது அல்லாப்ப அறைந்தோய் - இருவினைகளும் அழுது வருந்த அறத்தைக் கூறியவனே!; நின் சொல் அறைந்தார்கள் - நின் அறத்தைச் சாற்றினவர்கள்; பழுதுஇல் நறுநெய்க் கடற்சுடர் போல் பால்லாண்டெல்லாம் பரியார் - கெடுதியில்லாத நல்ல நெய்க்கடலில் இட்ட விளக்குப்போலே பல்லாண்டுகள் எல்லாம் வருந்தார்.

   (வி - ம்.) தொழுதி - தொகுதி. துளும்புதல் - அசைதல். பன்மீன் - உயிர்த் தொகுதிக்கும் திங்கள் அருகனுக்கும் உவமைகள். முதுவாய் - முதிய உண்மை. வலவை - பெற்றியை உடையை : முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று. வலம் - வெற்றி. அல்லாத்தல் - வருந்துதல். சொல் - ஈண்டு அறத்திற்கு ஆகுபெயர். பல்லாண்டெல்லாம் என்றது எக்காலத்தும் என்பதுபட நின்றது.

( 422 )
3021 செழும்பொன் வேய்ந்து மணியழுத்தித்
  திருவார் வைர நிரைத்ததனுட்
கொழுந்து மலருங் கொளக்குயிற்றிக்
  குலாய சிங்கா தனத்தின்மே
லெழுந்த பருதி யிருந்தாற்போ
  யழுந்தேன் வந்துன் னடியடைந்தே
பழுதி னறுநெய்க் கடற்சுடர்போற்
  னருவாய்ப் போத லழகிதோ.

   (இ - ள்.) செழும்பொன் வேய்ந்து - வளவியு பொன்னால் வேய்ந்து; மணி அழுத்தி - மணிகளை இழைத்து; திருஆர்வைரம் நிரைந்து - அழகு பொருந்திய வைரத்தை ஒழுங்குறப் பதித்து;