|  முத்தி இலம்பகம் | 
 1706  | 
 | 
  | 
| 
 அதனுள் கொழுந்தும் மலரும் கொளக் குயிற்றி - அதனுள் கொழுந்தும் மலரும் வடிவுகொள்ளும்படி வல்லியை எழுதி; குலாய சிங்காதனத்தின் மேல் செய்த அரியணையின் மேலே; எழுந்த பருதியிருந்தாற்போல் இருந்த எந்தை பெருமானே!- இளஞாயிறு இருந்தாற்போலே இருந்த எந்தையாகிய பெருமானே!; அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் - பிறவிக்கடலில் அழுந்தேனாய் வந்து நின் அடியைச் சேர்ந்தேன்; அருவாய்ப்போதல் அழகிது - பிறப்பற்றுப் போதல் நன்று. 
 | 
| 
    (வி - ம்.) திரு - அழகு. குயிற்றி - எழுதி. குலாய - பண்ணின. பருதி - ஞாயிறு. எந்தையாகிய பெருமானே என்க. அருவாய்ப்போதல் - பிறப்பற்றுப் போதல். ஓகாரம் : சிறப்பு; ஈற்றசையுமாம். 
 | 
 ( 423 ) | 
வேறு
 | 
|  3022 | 
குண்டலமும் பொற்றோடும் வைந்தாருங் குளிர் முத்தும் |   |  
|   | 
வண்டலம்பு மாலையு மணித்தொத்து நிலந்திவள |   |  
|   | 
விண்டலர்பூந் தாமரையின் விரைத்தும்ப மேனடந்த |   |  
|   | 
வண்டலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) குண்டலமும் - குண்டலமும்; பொன்தோடும் - பொன்னால் ஆகிய தோடும்; பைந்தாரும் - பசிய மாலையும்; குளிர் முத்தும் - தண்ணிய முத்தும்; வண்டு அலம்பும் மாலையும் - வண்டுகள் முரலும் (முடி)மாலையும்; மணித்தொத்தும் - (அம்முடி மாலையிலே) மணிக்கொத்தும்; நிலம் திவள - நிலத்திலே பொருந்தி அசைய; விண்டு அலர்பூந் தாமரையின் விரைத்தும்பமேல் நடந்த - விரிந்து மலர்ந்த அழகிய தாமரை மலரின் மணம் பொங்க அதன்மேல் நடந்த; வண்டு அலர்பூந் திருவடியை மணிமுடியின் வணங்கினான் - வண்டுகள் மொக்கும் அழகிய திருவடியை மணி முடியினாலே வணங்கினான். 
 | 
| 
    (வி - ம்.) குண்டலம் - காதணியிலொருவகை. அலம்பும் - முரல்கின்ற. தொத்து - கொத்து, திவள - துவள; புரள என்றவாறு. விரை - நறுமணம். தாமரையின் மேனடந்த அடி; வண்டலர் பூந்திருவடி எனத் தனித்தனி கூட்டுக. 
 | 
 ( 424 ) | 
|  3023 | 
நிலவிலகி யுயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகைநோ |   |  
|   | 
யுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழி |   |  
|   | 
யலகையிலாக் குணக்கடலை யகன்ஞான வரம்பானை |   |  
|   | 
விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான். |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நில விலகி - (ஒளியால்) நிலவை விலக்கி; உயிர் ஓம்பி - பல்லுயிரையும் காப்பாற்றி; நிமிர்ந்து ஒளிர்ந்து - மேனோக்கி 
 |