பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1715 

   (வி - ம்.) கோமான் என்றது பரதசக்கரவர்த்தியை. ”இலங்கல் ஆழியினான் களிற்றீட்டம் போல்” என்றார் நாமகளிலம்பத்தும் (32) புங்கவன் : சீவர்த்தமானன். வலம்புரி - சீவகனுக்குவமை.

( 442 )

31. சேணிகன் வரவு

வேறு

3041 மட்டலர் வனமலர்ப் பிண்டி வாமனார்
விட்டலர் தாமரைப் பாதம் வீங்கிரு
ளட்டலர் பருதியி னளிக்கச் செல்லுநாட்
பட்டதோர் பொருளினிப் பழிச்சு கின்றதே.

   (இ - ள்.) வீங்கு இருள் அட்டு - பேரிருளைக் கொன்று; அலர் பகுதியின் - அலர்ந்த ஞாயிறுபோல; மட்டு அலர் வனமலர்ப் பிண்டி வாமனார் - தேன் விரியும் அழகிய மலரையுடைய அசோகின் நிழலில் எழுந்தருளிய அருகப் பெருமானின்; விட்டு அலர் தாமரைப் பாதம் - முறுக்குடைந்து மலரும் தாமரை மலர் போலும் அடிகள்; அளிக்கச் செல்லும் நாள் - இருவினையைக் கெடுத்து அருள் பண்ணும்படி வழிபட்டுச் செல்லும் நாளிலே; பட்டது ஓர் பொருள் இனிப் பழிச்சுகின்றது - பிறந்ததொரு பொருள் இனி யான் கூறுகின்றது.

   (வி - ம்.) இது நூலாசிரியர் கூற்று.

   வாமனார் பாதம் இருள் அட்டு அளிக்க என்க. வாமனார் - அருகக் கடவுள். இருள் - இருவினை இருள்சேர் இருவினை என்றார் வள்ளுவனாரும். பட்டது - நிகழ்ந்தது. பொருள் - நிகழ்ச்சி. பழிச்சுதல் - கூறுதல்.

( 443 )

வேறு

3042 கயலின முகளிப் பாய
  முல்லையம் பொதும்பிற் காமர்
புயலின மொக்குள் வன்கட்
  குறுமுயல் புலம்பிக் குன்றத்
தயல்வளர் கின்ற வாமான்
  குழவியோ டிரிந்து செந்நெல்
வயல்வளர் கரும்பிற் பாயு
  மகதநா டென்ப துண்டே.

   (இ - ள்.) கயல் இனம் உகளிப் பாய - கயலின் தொகுதி எழுந்து பாய்வதாலே; முல்லைஅம் பொதும்பில் - முல்லைப்