பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1717 

3044 மருமுடி மன்னர் சூழ
  வலரணி பிண்டி வேந்தன்
றிருவடி விருந்து செய்வான்
  றிரண்முர சறைவித் தானே.

   (இ - ள்.) எரி மிடைந்த அனைய மாலை - தீ நெருங்கினாற் போன்ற மாலையையும்; இனம் மணி திருவில் வீசும் திருமுடி - பலவகை மணிகள் அழகிய ஒளியைச் சொரியும் அழகிய முடியையும்; ஆரம் மார்பின் - ஆரம் அணிந்த மார்பினையும் (உடைய); சேணிகன் நாமம் என்ப - சேணிகன் என்பது (அந் நகர மன்னனின்) பெயர் என்பர்; அருமுடி மன்னர் சூழ அலர் அணிபிண்டி வேந்தன் - அரிய முடியையுடைய வேந்தர் சூழ, மலர் அணிந்த பிண்டியின் நீழல் வேந்துக்கு; திருவடி விருந்து செய்வான் திண்முரசு அறைவித்தான் - திருவடி வழிபாடு செய்யத் திண்ணிய முரசினை அறைவித்தான்.

   (வி - ம்.) சேணிகள் - சிரேணிக மகராசன்.

   எரி - நெருப்பு. திருவில் - அழகிய ஒளி, அந்நகரத்து அரசன் நாமம் சேணிகன் என்ப என்க. பிண்டி வேந்தன் - அருகன், விருந்து - பூசனை.

( 446 )

வேறு

3045 பொன்னா வழியாற் புகழ்நாவழித்
  தாய்ந்த மெல்கோன்
மின்னார் மணிப்பூ ணவன்மேவிவிண்
  காறு நாறு
முன்னோர் வகுத்த முகவாசம்
  பொதிந்த வெந்நீர்
மன்னார வாய்க்கொண் டுமிழ்ந்தான்
  மணிமாலை வேலோன்.

   (இ - ள்.) மணிமாலை வேலோன் - முத்தாரம் அணிந்த வேலோனாகிய; மின்ஆர் மணிப்பூணவன் - ஒளி நிறைந்த மணிக்கலனுடையோன்; ஆய்ந்த மெல்கோல் மேவி - ஆராய்ந்த மெல்லிய கோலைக் கொண்டு பல் விளக்கி; பொன் நா வழியால் புகழ் நா வழித்து - பொன்னாலாகிய நா வழியாலே புகழ்பெற்ற தன் நாவை வழித்து; விண்காறும் நாறும் முன்னோர் வகுத்த முகவாசம் பொதிந்த வெந்நீர் - வானளவும் மணக்கின்ற முன்னோர் அமைத்த முகவாசம் நிறைந்த வெந்நீரை; மன் ஆர வாய்க்கொண்டு உமிழ்ந்தான் - பொருந்த நிறைய வாயிலே கொண்டு (கொப்புளித்து) உமிழ்ந்தான்.