| முத்தி இலம்பகம் | 
1720  | 
 | 
  | 
|  3049 | 
மைபொதி குவளை வாட்கண் |   |  
|   | 
  மல்லிகைக் கோதை நல்லார் |   |  
|   | 
நெய்பொதி நெஞ்சின் மன்னர் |   |  
|   | 
  நிலம்பிறக் கிடுவ போலுங் |   |  
|   | 
கொய்சுவற் புரவி மான்றோ் |   |  
|   | 
  குழுமணி யோடை யானை |   |  
|   | 
மெய்பொதிந் துயர்ந்த கோமான் |   |  
|   | 
  விரைப்பலி சுமந்த வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மை பொதி குவளை வாள் கண் - மை தீட்டிய குவளை மலர்போலும் ஒளிவீசுங் கண்களையும்; மல்லிகைக் கோதை நல்லார் - மல்லிகை மாலையையும் உடைய மங்கையரும்; நெய்பொதி நெஞ்சின் மன்னர் - அன்பு பொதிந்த நெஞ்சினையுடைய மன்னரும் (அமர்ந்து ஏந்திவர); நிலம் பிறக்கிடுவ போலும் கொய் சுவல் புரவி மான்தேர் - நிலம் புறங்காட்டியோடுவனபோல் விரைந்து செல்லும், கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகள் பூட்டிய தேரும்; குழுமணி ஓடை யானை - தொகுதியான மணிகளிழைத்த ஓடையையுடைய யானைகளும்; மெய் பொதிந்து உயர்ந்த கோமான் - உண்மையறிவு பொதிந்து மேம்பட்ட அருகப்பெருமானுக்காக; விரைப்பலி சுமந்த - மணப்பொருள்களைச் சுமந்தன. 
 | 
| 
    (வி - ம்.) விரைப்பலிகள் முன்னிரண்டு செய்யுளிலுங் கூறப்பட்டன. விரைப்பலிகளை மன்னரும் மங்கையரும் ஏந்தி அமர யானைகளும் தேர்களும் சுமந்து சென்றன. 
 | 
| 
    நெய் : நேயம் என்பதன் விகாரம். 'நெய் பொதி குஞ்சி' என்றும் பாடம். இப்பாடத்திற்கு நெய் : கத்தூரி. 
 | 
( 451 ) | 
|  3050 | 
கொடிக்குழாங் குஞ்சி பிச்சக் |   |  
|   | 
  குழாநிறை கோல மாலை |   |  
|   | 
முடிக்குழா மூரி வானம் |   |  
|   | 
  பால்சொரி கின்ற தொக்குங் |   |  
|   | 
குடைக்குழா மிவற்றின் பாங்கர்க் |   |  
|   | 
  குளித்தது குளிர்சங் கார்க்கும் |   |  
|   | 
படைக்குழாம் பாரிற் செல்லும் |   |  
|   | 
  பாற்கடல் பழித்த வன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கொடிக்குழாம் - கொடித் தொகுதியும்; குஞ்சி - குஞ்சித் தொகுதியும்; பிச்சக் குழாம் - பிச்சத்தொகுதியும்; நிறைகோலம் மாலை முடிக்குழாம் - நிறைந்த அழகிய மாலையை 
 |