| முத்தி இலம்பகம் | 
1725  | 
 | 
  | 
|  3058 | 
திருவி னோடகன்ற மார்பிற் |   |  
|   | 
  சீவக சாமி யென்பா |   |  
|   | 
னுருவினோ டொளியு நோக்கி |   |  
|   | 
  னொப்புமை யுலகி னில்லை |   |  
|   | 
மருவினா ரிமைத்து நோக்கின் |   |  
|   | 
  மனம்பிறி தாகி நிற்பா |   |  
|   | 
ரரிதிவன் முகத்து நோக்க |   |  
|   | 
  லழகொளி யன்ன வென்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான் - (இவன்) திருமகளோடு கூடி அகன்ற மார்பினையுடைய சீவகசாமி எனப்படுவான்; உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை - இவன் அழகையும் புகழையும் ஆராய்ந்தால் உவமை உலகில் இல்லை ; மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார் - (இவனை) நெருங்கினோர் இமைத்துப் பார்த்தால் அவன் அல்லன் என்று மனம் வேறு ஆகிய நிற்பார்; அழகு ஒளி அன்ன - நீ கூறிய அழகும் ஒளியும் நீ கூறிய தெய்வத் தன்மையேயாக இருக்கும்; இவன் முகத்து நோக்கல் அரிது என்றான் - (ஆதலால்) இவனிடத்துப் பார்த்தல் அரிது என்றான். 
 | 
| 
    (வி - ம்.) இது கணதரர் சேணிகனுக்குக் கூறியது. என்பான் - எனப்படுவான், உரு - அழகு: உட்குமாம், ஒளி - புகழ், மருவினார் - எய்தியவர், அவனல்லன் என மனம் பிறிதாகி என்க. 
 | 
( 460 ) | 
32.சேணிகன் வினா
 | 
|  3059 | 
மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமு |   |  
|   | 
மேதமின் றியம்புமி னடிக ளோவெனப் |   |  
|   | 
போதலர் புனைமுடி யிறைஞ்சி யேத்தினான் |   |  
|   | 
காதலிற் கணந்தொழக் காவன் மன்னனே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) காவல் மன்னன் கணம் காதலின் தொழ - உலக காவலனாகிய மன்னவன் முனிவர் குழு கேட்கவேண்டும் என்னும் காதலுடன் தொழும்படி; அடிகளோ! - அடிகளே!, மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும் - சீவகசாமியின் முற்பிறப்புத் தவ வரலாற்றையும், பற்றற்றுத் துறந்தசெய்திகளையும்; ஏதம் இன்று இயம்புமின் என - குற்றமின்றாகக் கூறுமின் என்று; போது அலர் புனைமுடி இறைஞ்சி ஏத்தினான் - மலரையுடைய ஒப்பனைசெய்த முடியினால் வணங்கிப் போற்றினான். 
 |