பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 173 

உடனே அறிவித்து; கவிகள்கொளக் கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் வீசி - பாவலர் கொள்ளுமாறு பெரிய கையையுடைய களிறும் கம்பலமும் காசும் கொடுத்து; விரும்பப் பிறப்பாய் - (யாவரும்) விரும்புமாறு பிறக்கும் நீ; வினைசெய்தேன் காணப்பிறக்கும்ஆ இஃது - தீவினையேன் காணும்படி பிறக்கும் தன்மை இத்தன்மைத்து.

 

   (வி - ம்.) ஓஓ: இரக்கக் குறிப்பு. 'பிறக்கும் ஆறு' என்பது 'பிறக்கும்ஆ' என விகாரப்பட்டது. செய்து - செய்ய: வினையெச்சத் திரிபு.

 

   பிறப்பாய் : வினையாலணையும் பெயர். கவிகள் : பெருமங்கலம் பாடுவோர்.

 

   கணிகள் - கணிதநூல் வல்லோர். சாதகம் - பிறப்புக் கணிதம். ஓகை - உவகை: இஃது ஆகுபெயராய் உவகைச் செய்தியை உணர்த்தும்.

( 279 )
309 வெவ்வா யோரி முழவாக
  விளிந்தா ரீமம் விளக்காக
வொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி
  னிழல்போ னுடங்கிப் பேயாட
வெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக்
  கூகை குழறிப் பாராட்ட
விவ்வா றாகிப் பிறப்பதோ
  இதுவோ மன்னர்க் கியல்வேந்தே.

   (இ - ள்.) வெவ்வாய் ஓரி முழவுஆக - கொடிய வாயையுடைய ஓரியின் குரல் முழவு ஆகவும்; விளிந்தார் ஈமம் விளக்கு ஆக - இறந்தவரைச் சுடும் ஈமத்தீ விளக்கு எனவும் (கொண்டு); ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் - தகுதியற்ற சுடுகாடாகிய உயர்ந்த மேடையிலே; பேய் நிழல்போல் நுடங்கி ஆட - பேய் நிழல்போல அசைந்து ஆட; கூகை எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் குழறிப் பாராட்ட - (அதனைக் கண்டு) கூகைகள் எப்பக்கத்தினும் அமர்ந்து இரக்கத்துடன் குழறும் ஒலியிற் பாராட்ட; இவ்வாறாகிய பிறப்பதோ! - இந்த இரங்கத்தக்க நிலையிற் பிறப்பதன் தீவினைதான் என்னே!; வேந்தே! இதுவோ மன்னர்க்கு இயல்? - அரசே! இதுவோ அரசர்க்குரிய தன்மை? (கூறுவாய்.)

 

   (வி - ம்.) 'வேந்தே?' என்றாள் அரசிளங்குமரனாதலின்.

 

   [நச்சினார்க்கினியர், 'இவ்வாறென்றது, தந்தை விரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய் வருந்தும் படி தீவினையுடைய தன்மையை. 'ஓகாரமிரண்டும் வினா' எனப் பொருள்