நாமகள் இலம்பகம் |
173 |
|
உடனே அறிவித்து; கவிகள்கொளக் கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் வீசி - பாவலர் கொள்ளுமாறு பெரிய கையையுடைய களிறும் கம்பலமும் காசும் கொடுத்து; விரும்பப் பிறப்பாய் - (யாவரும்) விரும்புமாறு பிறக்கும் நீ; வினைசெய்தேன் காணப்பிறக்கும்ஆ இஃது - தீவினையேன் காணும்படி பிறக்கும் தன்மை இத்தன்மைத்து.
|
|
(வி - ம்.) ஓஓ: இரக்கக் குறிப்பு. 'பிறக்கும் ஆறு' என்பது 'பிறக்கும்ஆ' என விகாரப்பட்டது. செய்து - செய்ய: வினையெச்சத் திரிபு.
|
|
பிறப்பாய் : வினையாலணையும் பெயர். கவிகள் : பெருமங்கலம் பாடுவோர்.
|
|
கணிகள் - கணிதநூல் வல்லோர். சாதகம் - பிறப்புக் கணிதம். ஓகை - உவகை: இஃது ஆகுபெயராய் உவகைச் செய்தியை உணர்த்தும்.
|
( 279 ) |
309 |
வெவ்வா யோரி முழவாக |
|
விளிந்தா ரீமம் விளக்காக |
|
வொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி |
|
 னிழல்போ னுடங்கிப் பேயாட |
|
வெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் |
|
கூகை குழறிப் பாராட்ட |
|
விவ்வா றாகிப் பிறப்பதோ |
|
இதுவோ மன்னர்க் கியல்வேந்தே. |
|
(இ - ள்.) வெவ்வாய் ஓரி முழவுஆக - கொடிய வாயையுடைய ஓரியின் குரல் முழவு ஆகவும்; விளிந்தார் ஈமம் விளக்கு ஆக - இறந்தவரைச் சுடும் ஈமத்தீ விளக்கு எனவும் (கொண்டு); ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் - தகுதியற்ற சுடுகாடாகிய உயர்ந்த மேடையிலே; பேய் நிழல்போல் நுடங்கி ஆட - பேய் நிழல்போல அசைந்து ஆட; கூகை எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் குழறிப் பாராட்ட - (அதனைக் கண்டு) கூகைகள் எப்பக்கத்தினும் அமர்ந்து இரக்கத்துடன் குழறும் ஒலியிற் பாராட்ட; இவ்வாறாகிய பிறப்பதோ! - இந்த இரங்கத்தக்க நிலையிற் பிறப்பதன் தீவினைதான் என்னே!; வேந்தே! இதுவோ மன்னர்க்கு இயல்? - அரசே! இதுவோ அரசர்க்குரிய தன்மை? (கூறுவாய்.)
|
|
(வி - ம்.) 'வேந்தே?' என்றாள் அரசிளங்குமரனாதலின்.
|
|
[நச்சினார்க்கினியர், 'இவ்வாறென்றது, தந்தை விரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய் வருந்தும் படி தீவினையுடைய தன்மையை. 'ஓகாரமிரண்டும் வினா' எனப் பொருள்
|
|