பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1739 

கண்ணால் அறியும் அறிவுக்குமுன் காணுங் காட்சியை மறைப்பது. அசக்கு தரிசனாவரணீயம் - கண்ணொழிந்த நான்கு பொறிகளினாலும் அறியும் அறிவை மறைப்பது. அவதி தரிசனாவரணீயம் - அவதிஞானத்துமுன் காணுங் காட்சியை மறைப்பது. கேவல தரிசனாவரணீயம் - கேவல ஞானத்துக்குமுன் காணும் காட்சியை மறைப்பது.

   பேறு : தானாந்தராயம், இலாபாந்தராயம், போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம், தானாந்தராயம் -கொடையினை விலக்குவது. இலாபாந்தராயம் - ஊதியத்தை இடையிலே விலக்குவது. போகாந்தராயம் - துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குவது. உபபோகாந்தராயம் - நுகர்தற்குரிய பொருள்களை விலக்குவது, வீரியாந்த ராயம் - வீரியத்தை விலக்குவது.

   காற்படை : பரிசேந்திரியம், நயனேந்திரியம் முதலியன.

( 483 )
3082 காதிப்போர் மன்னர் வீழக்
  கணையெரி சிதறி வெய்யோ
னோதிய வகையி னொன்றி
   யுலகுச்சி முளைத்த தேபோல்
வீதிபோ யுலக மூன்றும்
  விழுங்கியிட் டலோக நுங்கி
யாதியந் தகன்ற நான்மைக்
  கொடியெடுத் திறைமை கொண்டான்.

   (இ - ள்.) காதிப் போர் மன்னர் வீழ - உபாதியாகிய, போர் வேந்தர் பட்டு வீழும்படி; கணைஎரி சிதறி - கணையாகிய நெருப்பைத் தூவிக் கொன்று; ஓதிய வகையின் ஓன்றி - ஆகமத்தில் ஓதிய கூற்றிலே பொருந்தி; வெய்யோன் உலகு உச்சி முளைத்ததே போல் - ஞாயிறு உலகின் உச்சியிலே தோன்றியதைப்போல; வீதிபோய் - பரவிப் போய்; உலகம் மூன்றும் விழுங்கியிட்டு - உலகம் மூன்றையும் விழுங்கி; அலோகம் நுங்கி - அலோகத்தையும் விழுங்கி; ஆதி அந்தம் அகன்ற நான்மைக் கோடி எடுத்து - ஆதியும் அந்தமும் அகன்ற நான்கு கூறாகிய வெற்றிக் கொடியை எடுத்து; இறைமைகொண்டான் - இறைவனாந் தன்மையைக் கொண்டான்.

   (வி - ம்.) அந் நான்காவன : அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம் என இவை.

( 484 )
3083 பசும்பொனி னுலகிற் றேவர்
  பயிர்வளை முரச மார்ப்ப
வசும்புசோ் களிறு திண்டே
   ரலைமணிப் புரவி வேங்கை
விசும்பியங் கரியோ டாளி
  விடைமயி லன்ன நாக
நயந்தவை பிறவு மூர்ந்து
  நாதன்றாள் கோயில் கொண்டார்.