பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1741 

   விஞ்சை வேந்தர்க்கு அன்னமும், நீணில மன்னர்க்கு முகிலும் உவமையாக் கொள்க. சேர்ந்தார் என்னும் பயனிலையை இரண்டெழு வாய்க்கும் தனித்தனியே இயைத்துக் கொள்க.

( 486 )
3085 விண்ணியங் கருக்கன் வீழ்ந்து
  மீனிலங் கொள்வ தேபோன்
மண்ணெலாம் பைம்பொன் மாரி
   மலர்மழை சொரிந்து வாழ்த்தி
யெண்ணிலாத் தொழில்க டோற்றி
  யிந்திரர் மருள வாடிக்
கண்முழு துடம்பிற் றோன்றிச்
  சுதஞ்சணன் களிப்புற் றானே.

   (இ - ள்.) விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன்நிலம் கொள்வதே போல் - வானில் உலவும் ஞாயிறு வீழ்ந்து விண்மீன்களுடன் நிலம் கொள்வதைப்போல; மண் எலாம் பைம்பொன்மாரி மலர்மழை சொரிந்து வாழ்த்தி - நிலவுலகெங்கும் பைம்பொன் மழையையும் பூமாரியையும் பெய்து வாழ்த்தி; எண்ணிலாத் தொழில்கள் தோற்றி இந்திரா மருள -கணக்கில்லாத தொழில்களைத் தோற்றுவித்து இந்திரர் மருள; சுதஞ்சணன் கண் உடம்பில் முழுதும் தோன்றி ஆடிக் களிப்புற்றான் - சுதஞ்சணன் கண்கள் உடம்பெலாந் தோன்றி ஆடிக் களிப்புற்றான்.

   (வி - ம்.) தொழில்கள் தோற்றி - கூத்து முதலிய களியாடல்கள் தோற்றி.

   நச்சினார்க்கினியர், 'அருக்கன் விரும்பி மருளவும், வின்மீன்போல மண்ணிலுள்ளார் குவிந்து மலர்மழை சொரிந்து மருளவும், இந்திரர் பொன்மாரி பெய்து தொழில்கள் தோற்றி மருளவும் சுதஞ்சணன் ஆடிக் களிப்புற்றான்' என்பர்.

( 487 )
3086 குளித்தெழு வயிர முத்தத்
  தொத்தெரி கொண்டு மின்ன
வளித்துல கோம்பு மாலை
   யகன்குடை கவித்த தாங்கு
வளிப்பொர வுளருந் திங்கட்
  கதிரெனக் கவரி பொங்கத்
தெளித்துவில் லுமிழுஞ் செம்பொ
  னாசனஞ் சோ்ந்த தன்றே.