பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1743 

 

   (இ - ள்.) வழங்கு பொன்வரை வளரும் பைங்கண்மா உரையாதோ? - ஒளியைத தரும் பொன்மலையிலே வளரும் பசிய கண்களையுடைய புழுகு பூனையை அதனிடத்து வழங்கும் மணமே கூறாதோ? (அதுபோல); அழுங்கல் சூழவினை வெறுத்தாற்கு - இரக்கத்தையுடையதாய்ச் சூழ்ந்த வினையை வெறுத்துக் கெடுத்தாற்கு; நாற்றம் அது - இயல்பாக உளதாம் நாற்றமாகிய அதனை ; திருமணி முறுவல், முருக்கு இதழ் கொடிப் பவழத்து, முழங்கு தழங்கு, குரல்வாய் - அழகிய முத்துப்போலும் முறுவலை உடையதும், முருக்கிதழீனையும் கொடிப் பவழத்தினையும், போன்றதும், பேரொலி செய்யும் குரலையுடையதும் ஆகிய வாயே; தளைஅவிழ்ந்த மந்தாரம் தவநாறும் - முறுக்கவிழ்ந்த மந்தாரம் கெட நாறிக் கூறும்; அறியலாம் - (ஆதலால் நமக்கும் அதன் தன்மை) அறிந்து கூற இயலும்.

   (வி - ம்.) முறுவலுடைய வாய், முருக்கிதழும் பவழமும் போன்ற வாய், குரலையுடைய வாய் எனத் தனித்தனியே கூட்டுக.

( 490 )
3089 உறுப்பெலா மொளியுமிழ்ந்
  துணர்வரிதா யிருசுடருங்
குறைத்தடுக்கிக் குவித்ததோர்
   குன்றேபோன் றிலங்குமால்
வெறுத்திரு வினையுதிர்த்தாற்
  கதுவண்ணம் விளம்பலாங்
கறுப்பொழிந்த கனையெரிவாய்க்
  காரிரும்பே கரியன்றே.

   (இ - ள்.) இருவினை வெறுத்து ஊதிர்த்தாற்கு வண்ணம் அது - இருவினையை வெறுத்துக் கெடுத்தாற்கு இயல்பாக உள்ள நிறமாகிய அதற்கு; கணை எரிவாய்க் கறுப்பு ஒழிந்த கார் இரும்பே கரி அன்றே? - மிக்க நெருப்பினிடத்துக் கிடந்து தன் கறுப்புத் தீர்ந்த கரிய இரும்பே சான்றாகும்; உறுப்பு எலாம் ஒளி உமிழந்து உணர்வு அரிதாய் - உறுப்புக்கள் எல்லாமே ஒளியைச் சொரிந்து அறிவுக் கரியதாய்; இரு சுடரும் குறைத்து அடுக்கிக் குவித்தது ஓர் குன்றே போன்று இலங்கும் -ஞாயிறு நெருப்பு என்னும் இரண்டு சுடர்களையும் ஒளி குறையச் செய்து