பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 175 

இருத்தி - (நீ) இந்நிலை கண்டும் இவ்வுடலைவிட்டு நீங்காமல் இருக்கின்றாய்!; ஏற்று! - இஃது எவ்வளவு கொடிது!

 

   (வி - ம்.) மகனையும் உயிரையும் தனித்தனியே முன்னிலைப்படுத்திக் கூறினாள். மற்று: வினைமாற்று.

 

   பற்றாமன்னன் - பகைமன்னன், ஆல்: அசைகள், எற்று - எத்தகைய கொடுமைத்து.

( 281 )
311 பிறந்த நீயும் பூம்பிண்டிப்
   பெருமா னடிகள் பேரறமும்
புறந்தந் தென்பாற் றுயர்க்கடலை
  நீந்தும் புணைமற் றாகாக்காற்
சிறந்தா ருளரேல் உரையாயாற்
  சிந்தா மணியே கிடத்தியான்
மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன்
  மம்மர் நோயின் வருந்துகோ.

   (இ - ள்.) சிந்தாமணியே! - சிந்தாமணியே!; கிடத்தி - (நீ ஒன்றும் உரையாமற்) கிடக்கின்றனை; பிறந்த நீயும் - (என் வருத்தம் நீக்கப்) பிறந்த நீயும்; பூமபிண்டிப் பெருமான் அடிகள் பேரறமும் - மலர்ந்த அசோகின் நிழலில் அமர்ந்த அருகனார் அருளிய பெரிய அறமும்; புறந்தந்து - ஆதரவு செய்து; என்பால் துயர்க்கடலை நீந்தும் புணை ஆகாக்கால் - என்னிடந் தோன்றிய துயரக்கடலை யான் கடக்கும் தெப்பம் ஆகாவிட்டால்; சிறந்தார் உளரேல் உரையாய். நின்னினும் அப்பொருமானினும் சிறந்தவர் இருப்பரேல் உரைத்திடாய்; மறம்கூர் நும்கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ? - வீரம்மிக்க நும் இறைவன் கூறியதைச் செய்த நான் மயக்க நோயினால் வருந்துவேனோ?

 

   (வி - ம்.) சொல்: கருவியாகுபெயர். வருந்துகு: வருந்துவேன், தனித்தன்மை வினைமுற்று. பேரறப் பூம்பிண்டிப் பெருமானடிகள் என மாறுவர் நச்சினார்க்கினியர்.

( 282 )
312 அந்தோ விசயை பட்டனகொண்
   டகங்கை புறங்கை யானாற்போற்
கந்தார் களிற்றுத் தங்கோமான்
  கழிய மயிலோர் மயிலூர்ந்து
வந்தாற் போலப் புறங்காட்டுள்
  வந்தா டமியே யெனமரங்கள்
சிந்தித் திரங்கி யழுவனபோற்
  பனிசோ் கண்ணீர் சொரிந்தனவே.