| முத்தி இலம்பகம் |
1757 |
|
|
|
(வி - ம்.) நுடங்க - அசைய. அணிகம் - ஊர்திகள். கெந்தம் - நறுமணம். அகில் : ஆகுபெயர். கிளர்முடி : வினைத்தொகை.
|
( 517 ) |
| 3116 |
முளைத்தெழு பருதி மொய்கொண் | |
| |
முழங்கழற் குளித்த தேபோற் | |
| |
றிளைத்தெழு கொடிகள் செந்தீத் | |
| |
திருமணி யுடம்பு நுங்க | |
| |
விளைத்தபின் விண்ணு மண்ணு | |
| |
மங்கலம் வகையிற் செய்து | |
| |
வளைப்பொலி கடலி னார்த்து | |
| |
வலங்கொண்டு நடந்த வன்றே. | |
|
|
(இ - ள்.) முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததேபோல் - (கீழ்த்திசையிலே) தோன்றி எழுகின்ற ஞாயிறு மிகுதியான நெருப்பிலே முழுகினாற்போல; திளைத்து எழு செந்தீக் கொடிகள் - பயின்று எழு செந்தீயின் கொடிகள்; திருமணி உடம்பு நுங்க - அழகிய மாணிக்கம் போன்ற உடம்பை விழுங்க; விளைத்த பின் - அதனை முடித்த பிறகு; விண்ணும் மண்ணும் மங்கலம் வகையின் செய்து - வானவரும் மண்ணவரும் முத்தி என்னும் திருமணத்தை முறைப்படி யியற்றி; வளைப்பொலி கடலின் ஆர்த்து - சங்கினால் விளக்கமுற்ற கடலைப்போல ஆரவாரித்து; வலம் கொண்டு நடந்த - வலஞ்செய்து போயினார்.
|
|
(வி - ம்.) கர்ப்பாவதரணம், ஜன்மாபிஷேகம், பரிநிஷ்கிரமணம், கேவல ஞானம், பரிநிர்வாணம் என்னும் ஐந்து மங்கலங்களுள் பரிநிர்வாணம் என்னும் முத்தி ஒன்றாகும்.
|
( 518 ) |
| 3117 |
கேவல மடந்தை யென்னுங் | |
| |
கேழ்கிளர் நெடிய வாட்கட் | |
| |
பூவலர் முல்லைக் கண்ணிப் | |
| |
பொன்னொரு பாக மாகக் | |
| |
காவலன் றானொர் கூறாக் | |
| |
கண்ணிமை யாது புல்லி | |
| |
மூவுல குச்சி யின்பக் | |
| |
கடலினுண் மூழ்கி னானே. | |
|
|
(இ - ள்.) கேழ் கிளர் நெடிய வாள் கண் - ஒளி விளங்கும் நீண்ட வாளனைய கண்களையும்; பூ அலர் முல்லைக் கண்ணி - மலராக அலர்ந்த முல்லைக் கண்ணியையும் உடைய; கேவல மடந்தை என்னும் பொன் ஒரு பாகம் ஆக - கேவல ஞானமென்
|