நாமகள் இலம்பகம் |
177 |
|
இதன்கண் இறந்துபட்ட சச்சந்தனுக்கு ஞாயிறும், இடர்கொள் நெஞ்சத்து விசயைக்கு அந்திப் பொழுதும், சீவகனுக்குப் பிறையும் உவமைகள். இவ்வுவமைகள் நினைந்து நினைந்து இன்புறற்பாலன.
|
( 284 )
|
வேறு |
|
314 |
தேனமர் கோதை மாதர் |
|
திருமகன் றிறத்தை யோராள் |
|
யானெவன் செய்வ லென்றே |
|
யவலியா விருந்த போழ்திற் |
|
றானமர்ந்த துழையி னீங்காச் |
|
சண்பக மாலை யென்னுங் |
|
கூனிய துருவங் கொண்டோர் |
|
தெய்வதங் குறுகிற் றன்றே. |
(இ - ள்.) தேன்அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள் - தேன்பொருந்திய மாலையணிந்த விசயை தன் அருமை மகனின் நல்வினையை அறியாமல்; யான் எவன் செய்வல் என்று அவலியா இருந்த போழ்தில் - நான் யாது செய்வேன் என்று வருந்தியிருந்த அளவில்; தான் அயர்ந்து உழையின் நீங்காச் சண்பகமாலையென்னும் கூனியது உருவம்கொண்டு - தான் எப்போதும் அருகிலே யிருக்கும் இயல்பினளான சண்பகமாலை யென்னும் பெயரையுடைய கூனியின் வடிவங்கொண்டு; ஓர் தெய்வதம் குறுகிற்று - ஒரு தெய்வம் விசயையை அடைந்தது.
|
|
(வி - ம்.) இவன் அரசன் மகனாதலின், அச்சுடுகாட்டில் உறையும் தெய்வம் வந்தது. தெய்வதம் தைவதமென்னும் வடமொழிச் சிதைவு.
|
( 285 )
|
315 |
விம்முறு விழும வெந்நோ |
|
யவணுறை தெய்வஞ் சேரக் |
|
கொம்மென வுயிர்த்து நெஞ்சிற் |
|
 கொட்புறு கவலை நீங்க |
|
வெம்மனை தமியை யாகி |
|
யிவ்விட ருற்ற தெல்லாஞ் |
|
செம்மலர்த் திருவின் பாவா |
|
யான்செய்த பாவ மென்றாள். |
(இ - ள்.) அவண்உறை விம்முறு விழும வெந்நோய் தெய்வம் சேர - அங்கு வாழ்கின்ற, விசயை கொண்ட விம்மலுக்குரிய துன்பத்திற் கிரங்கித் துயர்கொண்ட தெய்வம் வந்தவுடன்; கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலைநீங்க - விரைவில் பெரு
|
|
|
|
| |