பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1773 

வேறு

3145 செய்வினை யென்னு முந்நீர்த்
  திரையிடை முளைத்துத் தேங்கொண்
மைவினை மறுவி லாத
  மதியெனுந் திங்கண் மாதோ
மொய்வினை யிருள்கண் போழு
  முக்குடை மூர்த்தி பாதங்
கைவினை செய்த சொற்பூக்
  கைதொழு தேத்தி னேனே.

   (இ - ள்.) செய்வினை என்னும் முந்நீர்த் திரையிடை-நல்வினை என்னும் கடலிலே; முளைத்து- தோன்றி; தேன் கொள் மைவினை மறுஇலாத மதி எனும் திங்கள் - இனிமை கொண்ட தீவினையாகிய குற்றம் இல்லாத அறிவு எனும் திங்களாலே; கைவினை செய்த சொல்பூ - ஆராய்ந்த செய்யுளாகிய பூவை; மொய்வினை இருள்கண் போழும் முக்குடை மூர்த்தி பாரதம் -செறிந்த வினையாகிய இருளை அவ்விடத்தே நீக்கும் முக்குடையுடைய இறைவன் திருவடியிலே (இட்டு) ; கைதொழுது ஏத்தினேன் - கையாலே தொழுது ஏத்தினேன்.

   (வி - ம்.) இதுவும் நூலாசிரியராகிய தேவர் கூற்று. நச்சினார்க்கினியர் கூறும் பொருள்:

”தத்தைகுண மாலையொடு தாவில் புகழ்ப் பதுமை
ஓத்தவெழிற் கேமசரி ஒண்கனக மாலை
வித்தகநல் விமலையொடு வெஞ்சுரமஞ் சரிதான்
அத்தகை யிலக்கணையொ டாகமணம் எட்டே.”
”பகைமாற் றொருநற் பரன்வாழ்த் தவைச்சொற் பதிக விலம்பகமே
வகைமாற் றொருநா மகளோ கோவிந்தை மணமுறு தத்தைகுணம்
மிகைமாற் பதுமை கேமசரி கனகம் விமலையர் வீழ்சுரமஞ்
சகைமாற் றொடுமண் மகள்வூ விலக்கணை முத்தியீ ராறொன்றே”

   இவையிரண்டும் கந்தியார் கூற்று என்பர் நச்சினார்க்கினியர்,

( 3 )

முத்தி இலம்பகம் முற்றிற்று

சீவகசிந்தாமணி உரை முற்றுப்பெற்றது.

வாழ்த்து