நாமகள் இலம்பகம் |
198 |
|
கெடுத்தலின். 'தொழுதேன்' என்று இகழ்ந்தாள். வளை கழற்றலரி தாகையால் உடைத்தாள். மணி - அழகு.
|
|
முத்தம் : அண்மைவிளியுமாம்.
|
( 322 ) |
352 |
பூப்பெய் செம்பொற் கோடிகமும் |
|
பொன்னா ரால வட்டமு |
|
மாக்கு மணிசெய் தோ்த்தட்டு |
|
மரவின் பையு மடுமல்குல் |
|
வவீக்கி மின்னுங் கலையெல்லாம் |
|
வேந்தன் போகி யரம்பையரை |
|
நோக்கி நும்மை நோக்கானீர் |
|
நோவா தொழிமி னெனத்துறந்தாள். |
|
(இ - ள்.) வேந்தன்போகி அரம்பையரை நோக்கி நும்மை நோக்கான் - அரசன் வானுலகு சென்றதால் இனி வான்மகளிரை நோக்குதலன்றி நும்மாலாய பயனைக் கொள்ளான்; நீர் நோவாது ஒழிமின்என - நீர் இனி வருந்தாமல் நீங்குமின் என்று கூறி ; பூபெய் செம்பொன் கோடிகமும் - பூவை வைக்கும் பொன்னாலான பூந்தட்டையும்; பொன்ஆர் ஆலவட்டமும் - பொன்னாலான ஆலவட்டத்தையும்; ஆக்கும் மணிசெய் தேர்த்தட்டும் - மணியாலாக்கி அமைத்த தேர்த்தட்டையும்; அரவின் பையும் - பாம்பின் படத்தையும்; அடும் அல்குல் வீக்கி மின்னும் கலையெல்லாம் துறந்தாள் - வென்ற அல்குலிலே அணிந்து மின்னும் மேகலைகளெல்லாவற்றையும் நீக்கினாள்.
|
|
(வி - ம்.) அரம்பையரை மெய்யுறு புணர்ச்சியின்றி நோக்கால் நுகர்தல் இயல்பாதலால், 'நோக்கி' என்றார். எனினும் 'நும்மை நோக்கான்' என்பதற்கு, 'நும்மாலான பயனைக் கொள்ளான்' என்றே பொருள் கொள்க. இது கண்ணால் நோக்காமல் மனத்தால் நோக்கும், 'நோக்கல் நோக்கம்' (தொல் -வேற்றுமை மயங்கு- 10) எனப்படும்.
|
( 323 ) |
353 |
பிடிக்கை போலுந் திரள்குறங்கி |
|
னணியு நீக்கிப் பிணையன்னா |
|
ளடிக்கிண் கிணியு மஞ்சிலம்பும் |
|
விரன்மோ திரத்தோ டகற்றியபின் |
|
கொடிப்பூத் துதிர்ந்த தோற்றம்போற் |
|
கொள்ளத் தோன்றி யணங்கலற |
|
வுடுத்தாள் கற்றோய் நுண்கலிங்க |
|
முரவோன் சிறுவ னுயர்கெனவே. |
|