நாமகள் இலம்பகம் |
208 |
|
நின்று - சீவகனின் நற்றாய் (சுநந்தை) பொற்கொடி போல வணங்கி நின்று; நனம்தலை உலகில் மிக்க நன்னுதல் மகளிர் - பரவிய இடமுடைய உலகிலே மேம்பட்ட விறல் மடந்தையும் புகழ் மடந்தையும் ; தங்கள் மனம் தளை பரிய - (இவனை அடையாமையால்) தங்கள் மனத்திற் குவிந்திருக்கும் வருத்தம் நீங்க; நின்ற மதலை மை ஆடுக என்று - இனி முறையே இருக்கின்ற மையோலை பிடிக்க என்று ; பூமகள் புலம்பி வைக உரைத்தாள் - திருமகள் தனித்திருக்கக் கூறினாள்.
|
|
(வி - ம்.) இது சுநந்தையின் தொழிலாதலின் அவள் சான்றோரிடம் கூறினாள். செல்வச் செருக்கின்றிக் கலை கற்கவேண்டுமாதலின், 'பூமகள் புலம்பி வைக' என்றார். பல நூல்களைக் கற்கவே வெற்றியும் புகழுமுண்டாம் என்று, 'தளைபரிய மையாடுக' என்றனள்.
|
|
இனி, இச்செய்யுளில் பூமகள் என்பதனை நிலமகள் என்று கொண்டு நோற்றும் பெற்றிலேன் என்று புலம்பிக்கிடக்க எனினுமாம். மையாடல் - மையோலை பிடித்தல் ; கற்கத் தொடங்குங்காற் செய்வதொரு சடங்கு. இதனை இக்காலத்தார் சுவடி தூக்கல் என்பர்.
|
( 338 ) |
368 |
முழவெனத் திரண்ட திண்டோண் |
|
மூரிவெஞ் சிலையி னானும் |
|
அழலெனக் கனலும் வாட்க |
|
ணவ்வளைத் தோளி னாளு |
|
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் |
|
மதலையை மயிலஞ் சாயற் |
|
குழைமுக ஞான மென்னுங் |
|
குமரியைப் புணர்க்க லுற்றார். |
|
(இ - ள்.) முழவு எனத் திரண்ட திண்தோள் மூரி வெஞ்சிலையினானும் - முழவு போலத் திரண்ட திண்ணிய தோளையும் பெரிய கொடிய வில்லையும் உடைய கந்துகனும் ; அழல் எனக் கனலும் வாள்கண் அவ்வளைத் தோளினாளும் - நெருப்பெனக் கனலைச் சொரியும் வாளனைய கண்களையும் அழகிய வளைத்தோள்களையும் உடைய சுநந்தையும்; யாழ் மருட்டும் மழலைத் தீஞ்சொல் மதலைய - யாழையும் மருட்டும் இனிய மழலைச் சொற்களையுடைய சீவகச் சிறுவனுக்கு; மயில் அம் சாயல் குழைமுக ஞானம் என்னும் - மயிலனைய மென்மைத் தன்மையையும் குழையணிந்த முகத்தையுமுடைய கலை என்னும்; குமரியைப் புணர்க்கல் உற்றார் - கன்னியை மணமுடிக்கத் தொடங்கினர்.
|
|
(வி - ம்.) 'குழைமுக ஞானமென்னுங் குமரி' என்பது 'குழையப் பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னுங் குமரி' என்னும் பொருளையும் தோற்றுவித்தது. குழைவு-அருள். கலை எப்போதும் அழிவற்றதாகலின்,
|
|