நாமகள் இலம்பகம் |
213 |
|
374 |
கோனெறி தழுவி நின்ற |
|
குணத்தொடு புணரின் மாதோ |
|
நானெறி வகையி னின்ற |
|
நல்லுயிர்க் கமிர்த மென்றான். |
|
(இ - ள்.) நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து - ஆகமங் கூறிய வழியினால் நன்மை தீமையை ஆராய்ந்து கூறிய பொருளினிடம் நெஞ்சு சென்று ; தீமைப் பால் நெறி பலவும் நீக்கி - தீய பகுதியான வழியெல்லாம் நீக்கி ; பருதி அம் கடவுள் அன்ன கோன் நெறி - ஞாயிறன்ன அருகப் பெருமானது நெறியை; தழுவி நின்ற குணத்தொடு புணரின் - பொருந்தி நின்ற பண்புடன் கூடினால்; நால்நெறி வகையில் நின்ற நல்லுயிர்க்கு அமிர்தம் என்றான் - நால்வகை நெறியிலே அமைந்த நல்ல உயிர்கட்கு ஆக்கம் என்றான்.
|
|
(வி - ம்.) நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் ஞாயிறு உவமை. குணம்: இரத்தினத்திரயம். அவை: நல்ஞானம் , நற்காட்சி, நல்லொழுக்கம். நானெறி: நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும் நெறி. நல்லுயிர்-வீடு பேறு விழையும் உயிர். இதனைப் 'பவ்விய சீவன்' என்பர் வடநூலார்.
|
|
நூல்நெறி - இறைவன் ஓதிய ஆகமவழி. இச்செய்யுள்,
|
|
|
”சென்ற விடத்தாற் செலவிடா தீதொெரீஇ |
|
|
நன்றின்பா லுய்ப்ப தறிவு” (குறள், 422) |
|
என்னுமருமைத் திருக்குறளை நினைப்பிக்கின்றது.
|
( 345 ) |
375 |
அறிவினாற் பெரிய நீரா |
|
ரருவினை கழிய நின்ற |
|
நெறியினைக் குறுகி யின்ப |
|
நிறைகட லகத்து நின்றார் |
|
பொறியினும் பெயர வைவாய்ப் |
|
பொங்கழ லரவின் கண்ணே |
|
வெறிபுலங் கன்றி நின்றார் |
|
வேதனைக் கடலு ணின்றார். |
|
(இ - ள்.) அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி - அறிவினால் உயர்ந்த பண்பினர் தீவினை நீங்கி நின்ற நன்னெறியினைக் கூடி; இன்ப நிறை கடல் அகத்து நின்றார் - இன்பம் நிறைந்த கடலிலே நின்றாராவர். பொறி எனும் பெயர ஐவாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே - ஐம்பொறிகள் என்னும் பெயரையுடைய ஐவாயினும் பொங்கும்
|
|