(வி - ம்.) தழங்கு குரல் ; தழங்குரல் என விகாரப்பட்டது. செழுங்களி : தரிசன மோகனீயப் பிரகிருதிகள் ஏழும். அவை : அநந்தானுபந்திக் குரோதம், அநந்தானு பந்திமானம், அநந்தானுபந்தி மாயை, அநந்தானுபந்தி லோபம், மித்தியாத்துவம் , ஸம்மியக்மித்தியாத்துவம், ஸம்மியக்துவப் பிரகிருதி என்பன. இவை நகர கதியிற் செலுத்தும். குணவதம் : வதம்-விரதம்; பகுதிப் பொருள் விகுதி.
|
( 349 ) |