நாமகள் இலம்பகம் |
218 |
|
382 |
நல்லறத் திறைவ னாகி |
|
நால்வகைச் சரண மெய்தித் |
|
தொல்லறக் கிழமை பூண்ட |
|
தொடுகழற் காலி னாற்குப் |
|
புல்லற நெறிக்கண் நின்று |
|
பொருள்வயிற் பிழைத்த வாறு |
|
மில்லறத் தியைபு மெல்லா |
|
மிருளறக் கூறி யிட்டான். |
|
(இ - ள்.) நல் அறத்து இறைவன் ஆகி - நல்லஅறத்திற்கு உரியவனாகி ; நால்வகைச் சரணம் எய்தி - நால்வகைச்; சரணங்களையும் அடைந்து ; தொல் அறக்கிழமை பூண்ட தொடுகழற் காலினாற்கு - பழமையான தன் குலத்திற்குரிய அறத்திற்கு உரிமை யேற்ற கழலணிந்த காலினானுக்கு ; புல் அற நெறிக்கண் நின்று பொருள்வயின் பிழைத்தவாறும் - தீநெறி செல்வோர் தாம் நடத்திய இழிந்த இல்லற நெறியாலே வீடுபேற்றை இழந்த படியும்; இல்லறத்து இயல்பும்-வீடுபேறு தப்பாமல் இல்லறம் நடத்தும் இயல்பும் ; எல்லாம் இருள் அறக் கூறியிட்டான் - பிறவற்றையும் மயக்கம் நீங்க விளம்பினான.
|
|
(வி - ம்.) நால்வகைச் சரணம் : அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம்.
|
|
இதனால், தேவர் இல்லறத்திலிருந்தே வீடுபேறெய்துதல் கூடும் என்னும் கொள்கையுடையராதல் உணரலாம். இக்கொள்கை,
|
|
|
”சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் |
|
|
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் |
|
|
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின் |
|
|
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ |
|
|
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள் அரி வையரோடு |
|
|
அநுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர் |
|
|
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும் |
|
|
நுழைவர் பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே”. (சிவ. சித். சுப. 287) |
|
எனவரும் சைவசமயக் கொள்கையையே ஒத்திருத்தல் உணர்க.
|
( 353 ) |
383 |
எரிமுயங் கிலங்கு வைவே |
|
லிளையவர் குழாத்தி னீங்கித் |
|
திருமுயங் கலங்கன் மார்பிற் |
|
சீவகற் கொண்டு வேறா |
|