நாமகள் இலம்பகம் |
220 |
|
வில்லினானை இக் கதையைக் கேட்பாயாக என்று கூறத் தொடங்கினான்.
|
|
(வி - ம்.) பூவை - நாகண வாய்ப்புள். இன்னோரன்ன சாதி என்க. சிலையினான்: சீவகன்.
|
( 355 ) |
385 |
வையக முடைய மன்னன் |
|
சச்சந்த னவற்குத் தேவி |
|
பைவிரி பசும்பொ னல்குற் |
|
பைந்தொடி விசையை யென்பாள் |
|
செய்கழல் மன்னன் றோ்ந்து |
|
தேவியைப் பொறியிற் போக்கி |
|
மையல்கொ ணெஞ்சிற் கல்லா |
|
மந்திரி விழுங்கப் பட்டான். |
|
(இ - ள்.) வையகம் உடைய மன்னன் சச்சந்தன் - இவ்வுலகுடை மன்னன் சச்சந்தனென்பான்; அவற்குத் தேவி பைவிரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசயை என்பாள் - அவனுக்குத் தேவி பாம்பின் படம் என விரிந்த, பசும்பொன் மேகலை சூழ்ந்த அல்குலையும் பைந்தொடியையும் உடைய விசயை எனப்படுவாள்; செய்கழல் மன்னன் தேர்ந்து - கழலணிந்த சச்சந்தன் தன் அமைச்சன் கட்டியங்காரனின் சூழ்ச்சியை அறிந்து; தேவியைப் பொறியில் போக்கி - தன் காதலியை மயிற் பொறியிலே தப்பிப் போகவிட்டு; மையல் கொள் நெஞ்சன் - மயக்கமுற்ற நெஞ்சினனான ; கல்லா மந்திரி விழுங்கப்பட்டான் - அறிவற்ற மந்திரியினாற் கொல்லப்பட்டான்.
|
|
(வி - ம்.) பொன்-மேகலை (கருவியாகுபெயர்). தேர்ந்து - கனவிற்குப் பிறகு விசயையைப் போக விடஎண்ணி. மையல்- 'தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைக்' கொல்லுதல்.
|
|
சீவகன் கடைபோகக் கேட்கும்பொருட்டு இச்செய்தியைப் பழங்கதையொன்றனைக் கூறுமாறுபோலக் கூறினன் என்பது கருத்து. இக்கருத்தால் நின்தந்தை தாய் என்னாமல் சச்சந்தன் என்றும் அவற்குத் தேவி என்றும் ஏதிலார்போலக் கூறினன். கல்லா மந்திரி என்றது கட்டியங்காரனை. விழுங்கப்பட்டான் என்பதற்கேற்ப மந்திரிமாநாகத்தால் என்க.
|
( 356 ) |
386 |
புலம்பொடு தேவி போகிப் |
|
புகழ்கருங் காடு நண்ணி |
|
வலம்புரி யுலகம் விற்கு |
|
மாமணி யீன்ற தென்ன |
|