பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 227 

   (வி - ம்.) பருதிபோற் பகையாகிய இருளைக் கெடுக்கும் வேல். உலோகமா பாலன் : மா: வியங்கோளசையன்றி இசை நிறைத்து நின்றது ; புறனடையான் வந்தது (தொல். இடை. 48) ; 'ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே ' (புறநா. 193) என்றாற்போல.

( 366 )
396 வெஞ்சினங் குறைந்து நீங்க
  விழுத்தவந் தொடங்கி நோற்கும்
வஞ்சமில் கொள்கை யாற்குப்
  பாவம்வந் தடைந்த தாகக்
குஞ்சர முழங்கு தீயின்
  கொள்கையின் மெலிந்திம் மூதூர்
மஞ்சுதோய் குன்ற மன்ன
  மாடவீட் டகம்பு குந்தான்.

   (இ - ள்.) வெம் சினம் குறைந்து நீங்க - கொடுஞ் சினம் குறைந்து நீங்கும்படி; விழுத்தவம் தொடங்கி நோற்கும் வஞ்சம் இல் கொள்கையாற்கு - சிறந்த தவத்தைத் தொடங்கி நோற்கும் தூய கொள்கையையுடைய அவனுக்கு ; பாவம் வந்து அடைந்ததாக - தீவினைப் பயன் வந்து சேர்ந்ததாக; முழங்கு குஞ்சரத் தீயின் - தணிவற்ற யானைத்தீ என்னும் நோயால்; கொள்கையின் மெலிந்து - தவம்புரிய இயலாமற் பசியினால் வாடி ; இம் மூதூர் - இப் பழம் பதியிலே ; மஞ்சுதோய் குன்றம் அன்ன மாட வீட்டகம் புகுந்தான் - முகில் தவழும் மலையனைய மாடங்களின் இடையே நுழைந்தான்.

( 367 )
397 உரைவிளை யாமை மைந்தன்
  கேட்கிய வுவந்து நோக்கி
வரைவிளை யாடு மார்பன்
  யாரவன் வாழி யென்ன
விரைவிளை யாடுந் தாரோய்
  யானென விரும்பித் தீம்பாற்
றிரைவிளை யமிர்த மன்ன
  கட்டுரை செல்க வென்றான்.

   (இ - ள்.) உரை விளையாமை மைந்தன் உவந்து கேட்கிய நோக்கி - கதை முடிவதற்கு முன்னரே சீவகன் மகிழ்வுடன் (ஐயம் நீங்க) கேட்பதற்கு நோக்கி; 'வரை விளையாடு்ம் மார்பன் யார் அவன் வாழி' என்ன - மலை தனக்கு நிகராகக் கருதி விளையாடும் மார்பினனாகிய அவன் யார்? அவன் வாழ்க!' என்று வினவ ; 'விரை விளையாடும் தாரோய்! யான்' என - 'மணம்