நாமகள் இலம்பகம் |
228 |
|
உலவும் தாரினனே! அவன் யானே' என்று ஆசிரியன் கூற; விரும்பி - மேலே கேட்க விழைந்து; திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான் - 'கடலில் விளைந்த அமிர்தம் போன்ற கதை மேலும் செல்வதாக' என்று சீவகன் வேண்டினான்.
|
|
(வி - ம்.) விளையாமை - முற்றுமுன்னர். கேட்கிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வரைவிளையாடும் மார்பன் என்றது மலையே தனக்கு நிகரென்று கருதி அதனோடு விளையாடுதற்குக் காரணமான மார்பையுடையன் என்றவாறு. விரை - நறுமணம். தீம்பால் திரை - பாற்கடல்.
|
( 368 ) |
398 |
பூத்தின்று புகன்று சேதாப் |
|
புணர்முலை பொழிந்த தீம்பா |
|
னீத்தறச் செல்ல வேவித் |
|
தட்டவின் னமிர்த முண்பான் |
|
பாத்தரும் பசும்பொற் றாலம் |
|
பரப்பிய பைம்பொற் பூமி |
|
யேத்தருந் தவிசி னம்பி |
|
தோழரொ டேறி னானே. |
|
(இ - ள்.) சேதா பூத்தின்று புகன்று புணர்முலை பொழிந்த தீம்பால் - சிவப்புப் பசு மலர்களைத் தின்று விருப்பத்துடன் முலைகளில் இருந்து பெய்த இனிய பால்; நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான் - முற்றும் வற்றிக் கலக்க வேகவைத்துச் சமைத்த இனிய அடிசிலை உண்பதற்கு; பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி - தூய பசும் பொன் கலங்கள் பரப்பிய பொன் நிலத்திலே; ஏத்தருந் தவிசின் - புகழ்தற்கரிய இருக்கையிலே; நம்பி தோழரொடு ஏறினான் - கந்துகன் தோழரோடு அமர்ந்தான்.
|
|
(வி - ம்.) சேதா : பண்புத்தொகை. பாத்தல் அரும்பசும் பொன் - (இனியும் குற்றமின்மையால்) பிரிக்கவியலாத பசும் பொன் : ஓட்டற்ற பொன்.
|
( 369 ) |
399 |
புடையிரு குழையு மின்னப் |
|
பூந்துகில் செறிந்த வல்கு |
|
னடையறி மகளி ரேந்த |
|
நல்லமிர் துண்ணும் போழ்தி |
|
னிடைகழி நின்ற வென்னை |
|
நோக்கிப்போந் தேறு கென்றான் |
|
கடல்கெழு பருதி யன்ன |
|
பொற்கலத் தெனக்கு மிட்டார். |
|