(இ - ள்.) கைவரை அன்றி நில்லாக் கடுஞ்சின மடங்கல் அன்னான் - ஒழுககத்தின் எல்லை கடவாத, கொடிய சீற்றமுடைய சிங்கம் போன்றவன்; தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்தகத்து எழுதி - தன் பகைவரை அழிக்கும் முறைமையை அவன் மனத்திலே கொள்ளுமாறு உருவாக்கி; செம்பொன் பைவிரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும் மைவரை மார்பினாற்கும் - மேகலை அணிந்த அல்குலையுடைய சுநந்தைக்கும் கடல் போற் கிடக்கும் செல்வத்திலே தங்கிய, முகில் தங்கிய மலையனைய மார்பினான் கந்துகனுக்கும்,; மனம் உறத் தேற்றி யிட்டான் - உள்ளத்திற் பொருந்துமாறு (தன் துறவைத்) தெளிவித்திட்டான்.
|
( 378 ) |