பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 247 

வேறு

 
433 கார்விளை மேக மன்ன
  கவுளழி கடாத்த வேழம்
போர்விளை யிவுளித் திண்டோ்
  புனைமயிர்ப் புரவி காலாள்
வார்விளை முரசம் விம்ம
  வானுலாப் போந்த தேபோ
னீர்டிவிளை சுரிசங் கார்ப்ப
  நிலநெளி பரந்த வன்றே.

   (இ - ள்.) கார்விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம் - கார்காலத்திற் றோன்றாநின்ற முகிலனைய, கவுளிலிருந்து பெருகும் மதமுடைய களிறுகளும்; போர் விளை இவுளித் திண்தேர் - போருக்குத் தகுதியான குதிரை பூட்டிய தேர்களும்; புனைமயிர்ப் புரவி - அணிசெய் மயிருடைய குதிரைகளும்; காலாள் - காலாட்களும் ஆகிய நாற்படையும்; வார்விளை முரசம் விம்ம நீர்விளை சுரிசங்கு ஆர்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசுகள் முழங்கவும், நீரிலிருந்து கிடைத்த சுரிந்த சங்குகள் ஆரவாரிக்கவும் ; வான் உலாப் போந்ததேபோல் - முகில் முழங்கி உலா வருவதுபோல்; நிலம் நெளி பரந்த - நிலம் நெளியுமாறு பரவியெழுந்தன.

 

   (வி - ம்.) யானையும் பரியும் முழக்கமும் உண்மையின் மேகம் உவமை.

 

   இனி, வானுலாய்ப் போந்ததே போலும் நீராவது கடல்; அதில் விளைந்த சங்கு எனலும் ஒன்று. 'நெளிய' என்பது 'நெளி' என வந்தது விகாரம்.

( 25 )
434 காலகம் புடைப்ப முந்நீர்க்
  கடல்கிளர்ந் தெழுந்த தேபோல்
வேலக மிடைந்த தானை
  வெஞ்சின வெயினர் தாக்க
வால்வளை யலற வாய்விட்
  டிரலையுந் துடியு மார்ப்பப்
பால்வளைந் திரவு செற்றுப்
  பகலொடு மலைவ தொத்தார்.

   (இ - ள்.) கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததேபோல் - காற்று உள்ளே மோதியதால் முந்நீர்மையுடைய கடல் பொங்கி எழுந்ததைப்போல்; வேல் அகம்