பக்கம் எண் :

கோவிந்தையார் இலம்பகம் 256 

   துண்டேல் என்றார். உண்டேல் என்றது இல்லை என்பதுபட நின்றது. காட்டுள் என்பது நமக்கே உரிய இக்காட்டுள் என்பதுபட நின்றது. ஏட்டை - இளைப்பு.

( 38 )

வேறு

 
447 கடற்படை யனுங்க வென்ற
  கானவ ரென்னுங் கூற்றத்
திடைப்படா தோடிப் போமி
  னுய்யவென் றிரலை வாய்வைத்
தெடுத்தனர் விளியுஞ் சங்கும்
  வீளையும் பறையுங் கோடுங்
கடத்திடை முழங்கக் காருங்
  கடலுமொத் தெழுந்த தன்றே.

   (இ - ள்.) கடல்படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்திடைப் படாது - அரசனுடைய கடலனைய படைகெடும் படி வென்ற வேடர் என்னும் இக் கூற்றுவனிடம் அகப்படாமல்; உய்ய ஓடிப்போமின் என்று - பிழைக்க ஓடிப்போங்கோள் என்று கூறி; இரலை வாய் வைத்து - துத்தரிக் கொம்பை ஊதி; விளியும் வீளையும் எடுத்தனர் - கொக்கரிப்பையும் சீழ்க்கையையும் எழுப்பினர்; கடத்திடை சங்கும் பறையும் கோடும் முழங்க - (அவ்வொலிக்கு எதிரே) காட்டிலே சங்கும் பறையும் கொம்பும் சீவகன் படை முழங்க; காரும் கடலும் ஒத்து எழுந்தது - இரண்டு படையின் ஒலியும் காரையும் கடலையும் ஒத்து எழுந்தன.

 

   (வி - ம்.) படை அனுங்க வென்ற என்றது கூற்றம் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. உய்ய ஓடிப் போமின் என மாறுக. இரலை - துத்தரி என்னும் ஒருவகைக் கொம்பு. இது மான் கொம்பாலாயது போலும். விளி - கூக்குரல். வீளை - சீழ்க்கை. ”வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த” என்றார் பிறரும் (குறுந். 272)

( 39 )
448 கைவிசை முறுக்கி வீசுங்
  கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச்
செய்கழற் குருசில் திண்டோ்
  விசையொடு திசைக ளெல்லா
மையென வளைப்ப வீர
  ரார்த்தன ரவரு மார்த்தார்
மொய்யமர் நாட்செய் தையன்
  முதல்விளை யாடி னானே.