| கோவிந்தையார் இலம்பகம் |
265 |
|
|
மறைய, ஒருவர் பின்பு ஒருவராக நின்ற நல்லார்' என்பர் நச்சினார்க்கினியர். பொருந்துமேற் கொள்க.]
|
( 52 ) |
| 461 |
வாளரந் துடைத்த வைவே |
| |
லிரண்டுடன் மலைந்த வேபோ |
| |
லாள்வழக் கொழிய நீண்ட |
| |
வணிமலர்த் தடங்க ணெல்லா |
| |
நீள்சுடர் நெறியை நோக்கு |
| |
நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற் |
| |
காளைதன் றோ்செல் வீதி |
| |
கலந்துடன் றொக்க வன்றே. |
|
|
(இ - ள்.) வாள் அரம் துடைத்தவை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல் - வாளரத்தால் அராவின கூரிய வேல்கள் இரண்டு தம்முட் பொருதன போல; ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணிமலர்த் தடங்கண் எல்லாம் - ஆடவர் வரவினைப் போக்கி நீண்ட அழகிய மலரனைய பெருங்கண் எல்லாம்; நீள் சுடர் நெறியை நோக்கும் நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல் - பெரிய ஞாயிறுபோம் நெறியைப் பார்க்கும் நிரையிதழ்களையுடைய நெருஞ்சி மலர்களைப் போல ; காளை தன் தேர்செல் வீதி கலந்து உடன்தொக்க - சீவகனுடைய தேர்செல்லுந் தெருக்களிலே (கொடுமை செய்ய வியலாது) தம்மிற் கலந்து சேர நெருங்கின.
|
|
|
(வி - ம்.) வாளரம் : அரங்களில் ஒருவகை.
|
|
|
நெருஞ்சிப் பூ ஞாயிற்று மண்டிலம் இயங்குந்தோறும் அதற்கியையத் திரும்பி அதனை நோக்கும் இயல்புடையதாகலின் சீவகன் தேர் இயங்கு தொறும் இயங்கி அவனையே நோக்கும் மகளிர் கண்களுக்கு உவமை எடுத்தார்.
|
|
|
இதனை,
|
|
| |
”செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப் |
|
| |
பொன்புனை மலரின் புகற்சி போல” (2-4 : 14 - 5.) |
|
|
என வரும் பெருங்கதையானும் உணர்க.
|
( 53 ) |
| 462 |
வடகமுந் துகிலுந் தோடு |
| |
மாலையு மணியு முத்துங் |
| |
கடகமுங் குழையும் பூணுங் |
| |
கதிரொளி கலந்து மூதூ |
| |
ரிடவகை யெல்லை யெல்லா |
| |
மின்னிரைத் திட்ட தேபோற் |
| |
படவர வல்கு லாரைப் |
| |
பயந்தன மாட மெல்லாம். |
|