|
(வி - ம்.) கொடையுளும், படையுளும் : உம் : உயர்வு சிறப்பும்மை. 'கொடையிலும் ஒருவனே சிறப்புறுவான்; படையிலும் ஒருவனே சிறப்புறுவான்' என்று நூலறிந்தோர் கூறுவர். 'எனினும், இவ்விரண்டும் இன்று சீவகனிடங் கண்டோம்' என்றனர். கொடையிற் சிறந்தோன் கன்னன். படையிற் சிறந்தோன் அருச்சுனன், 'ஒன்றல்லவை பல' என்பது தமிழ் நடை. ஆதலின், 'எல்லாம்' என்றார். சொல்லிற்றெல்லாம் : ஒருமை பன்மை மயக்கம்.
|
( 56 ) |