| கோவிந்தையார் இலம்பகம் |
269 |
|
|
(இ - ள்.) மண் அகத்து இவர்கள் மழகளிறு அனைய தோன்றல் ஒவ்வார் - நிலவுலகத்துள்ள இவர்கள் இளங்களிறு போன்ற இத் தோன்றலுக்கு ஒப்பாகார்; மற்று இவ்வென்றி வேல் குருசில் ஒப்பார் விண் அகத்து உளர்கொல்? - இனி இவ்வெற்றி வேலேந்திய குருசிலை ஒப்பார் வானுலகத்தே உள்ளனரோ? அறியேம்; பண் அகத்து உறையும் சொல்லார் நல்நலம் பருகவேண்டி - பண்ணில் அமைந்த இனிய மொழி மங்கையர் நல்ல அழகை நுகர விரும்பி; அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ? அளியர் என்பார் - இப் பெருந்தகையைத் தவத்தினாலே பெற்றவர் யாவரோ? அவர் அளிக்கத் தக்கார் என்பார் (சிலர்).
|
|
|
(வி - ம்.) உலகிலுள்ள இளைஞர் தம் மனத்திற்கு அணியராதலால் இவர் என்று சுட்டினார். யார் கொலோ என்றது மக்களோ தேவரோ என்றையுற்றவாறு.
|
( 59 ) |
| 468 |
வட்டுடைப் பொலிந்த தானை |
| |
வள்ளலைக் கண்ட போழ்தே |
| |
பட்டுடை சூழ்ந்த காசு |
| |
பஞ்சிமெல் லடியைச் சூழ |
| |
அட்டரக் கனைய செவ்வா |
| |
யணிநலங் கருகிக் காமக் |
| |
கட்டழ லெறிப்ப நின்றார் |
| |
கைவளை கழல நின்றார். |
|
|
(இ - ள்.) வட்டு உடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே - வட்டுடையோடு அழகுற்றுக் காணப்படும், உடையணிந்த வள்ளலாகிய சீவகனைக் கண்டபொழுதே; அட்ட அரக்கு அனைய செவ்வாய் அணிநலம் கருகி - காய்ச்சிய செவ்வரக்கனைய சிவந்த வாயின் அழகிய நலம் கருகி; பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியைச் சூழ - பட்டாடையிலே சூழ அணிந்த மேகலை பஞ்சி அனைய மெல்லிய அடியைச் சூழவும்; கைவளை கழல நின்றார் - கைவளைகள் கழலவும் (மெய்யிளைத்து) நின்றனர்.
|
|
|
(வி - ம்.) வட்டுடை : முழந்தாள் அளவாக வீரர் உடுக்கும் உடை. அட்ட அரக்கு: அகரம் தொக்கது.
|
( 60 ) |
| 469 |
வார்செலச் செல்ல விம்மு |
| |
வனமுலை மகளிர் நோக்கி |
| |
யோ்செலச் செல்ல வேத்தித் |
| |
தொழுதுதோ டூக்க விப்பாற் |
|