| கோவிந்தையார் இலம்பகம் |
274 |
|
|
(வி - ம்.) பொறிமுதல் - இருவினையும் செய்தற்குக் காரணமான உயிர். 'தொழின் முதனிலையே' (தொல். வேற்றுமை மயங்கி. 29) என்றாற் போல. நாட்டையும் அமைச்சர் அறிவுரையையும் நோக்காததனால், 'கேள்முதற் கேடுசூழ்ந்த நாட்டிறை' என்றார். 'கேள் முதல்' என்பதற்கு 'முதலில் இதனைக் கேள்' என்று பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர்.
|
( 67 ) |
| 476 |
கோலிழுக் குற்ற ஞான்றே |
| |
கொடுமுடி வரையொன் றேறிக் |
| |
காலிழுக் குற்று வீழ்ந்தே |
| |
கருந்தலை களைய லுற்றேன் |
| |
மால்வழி உளதன் றாயின் |
| |
வாழ்வினை முடிப்பல் என்றே |
| |
ஆலம்வித் தனைய தெண்ணி |
| |
அழிவினுள் அகன்று நின்றேன். |
|
|
(இ - ள்.) கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடுமுடிவரை ஒன்று ஏறி - அரசன் இறந்த அன்றே நீண்ட முடியை யுடைய மலை ஒன்றில் ஏறி; கால் இழுக்குற்று வீழ்ந்தே கருந்தலை களையல் உற்றேன் - கால்தவறி வீழ்ந்தவன்போல் வீழ்ந்து தலையுடைந்து இறக்க முயன்றேன்; மால் வழி உளதன்றாயின் வாழ்வினை முடிப்பல் என்றே - அரசன் கால்முளை இல்லை யென்றறிந்த பிறகே வாழ்வை முடிப்பேன் என்றே; ஆலம் வித்து அனையது எண்ணி - ஆலம் விதை போன்ற பயனுடைய நினைவு கொண்டு; அழிவினுள் அகன்று நின்றேன் - இறப்பினை நீங்கி நின்றேன்.
|
|
|
(வி - ம்.) [நச்சினார்க்கினியர், 'அரசன் வழி ஆலம்வித்துப் போலத் தெறித்துப்போய் மறைந்தது பின் தோன்றினதில்லையாயின் உயிரைப் போக்குவல் என்றே எண்ணி, வருத்தத்தே மிக்கு நின்றேன்' என்று மொழி மாற்றிப் பொருள் கூறுவர்.]
|
|
|
'கால் இழுக்குற்று வீழ்ந்து' என்றது, கட்டியங்காரன், 'இவன் அரசனோடு இறந்தான்' என்று நட்புரிமையறிந்து தன் சுற்றத்தை யழிப்பான் என்று கருதி.
|
|
|
அரசிக்கு மகவுண்மை யறிதலின் இங்ஙனங் கூறினான். இதனையே, 'கேட்டு மறக்க' என்றான்.
|
|
|
நன்றல்லது அன்றே மறப்பது நன்றாயினும் நினக்கிதனைக் கூறுதல் நன்றென்று கூறுகின்றேன் என்பான் கேட்டிது மறக்க என்றான்.
|
( 68 ) |
| 477 |
குலத்தொடு முடிந்த கோன்றன் |
| |
குடிவழி வாரா நின்றே |
| |
னலத்தகு தொறுவி னுள்ளே |
| |
னாமங்கோ விந்த னென்பே. |
|