| கோவிந்தையார் இலம்பகம் |
275 |
|
| 477 |
னிலக்கண மமைந்த கோதா |
| |
வரியென விசையிற் போந்த |
| |
நலத்தகு மனைவி பெற்ற |
| |
நங்கைகோ விந்தை யென்பாள். |
|
|
(இ - ள்.) குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாராநின்றேன் - குலத்தொடு மடிந்த அரசனுடைய குடிகளின் வழியிலே வருவேன் யான்; நலம்தகு தொறுவின் உள்ளேன் - நன்மையுற்ற ஆனிரை யுடையேன்; நாமம் கோவிந்தன் என்பேன். கோவிந்தன் என்று பெயர் கூறப்படுவேன்; இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையின் போந்த - மகளிரிலக்கணம் பொருந்திய கோதாவரி என்று புகழப் பெற்ற ; நலம்தகும் மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள் - நன்மையுடையாள் என் மனைவி யீனற மங்கை கோவிந்தை எனப்படுவாள்.
|
|
|
(வி - ம்.) குலம் தோன்றுதல் அருமை பற்றிப் பின்னும், 'முடிந்த' என்றான். தன்குல மெல்லாம் இப்போது தானே என்பது தோன்ற, 'வாராநின்றேன்' என்றான்.
|
|
|
இலக்கணம் - குலமகளிர்க்குரிய இலக்கணம். கோதாவரி என்பது நந்தகோன் மனைவியின் பெயர். 'தாயைப்போலே பிள்ளை' என்னும் பழமொழி பற்றிக் கோவிந்தையின் சிறப்புக் கூறுவான் தாய்மேலேற்றிக் கூறினன் என்க.
|
( 69 ) |
| 478 |
வம்புடை முலையி னாளென் |
| |
மடமகள் மதர்வை நோக்க |
| |
மம்படி யிருத்தி நெஞ்சத் |
| |
தழுத்தியிட் டனைய தொப்பக் |
| |
கொம்படு நுசுப்பி னாளைக் |
| |
குறையிரந் துழந்து நின்ற |
| |
நம்படை தம்மு ளெல்லா |
| |
நகைமுக மழிந்து நின்றேன். |
|
|
(இ - ள்.) வம்பு உடை முலையினாள் என் மடமகள் மதர்வை நோக்கம் - கச்சிறுக்கிய முலையுடையாளாகிய என் மடமகளின் மயக்கத்தை ஊட்டும் நோகக்ம்; அம்பு அடி யிருத்தி நெஞ்சத்து அழுத்தியிட்ட அனையது ஒப்ப - அம்பினைத் தோளடியிலே செல்ல ஊன்றி நெஞ்சத்து அழுத்தியிட்டாற் போன்றதாலே; கொம்பு அடு நுசுப்பினாளை - மலர்க் கொம்பை வென்ற இடையினாளை; குறை இரந்து உழன்று நின்ற - பெறவேண்டி வருந்தி நின்ற; நம் படை தம்முள் எல்லாம் நகைமுகம் அழிந்து நின்
|
|