காந்தருவ தத்தையார் இலம்பகம் |
292 |
|
நீங்கல் மடவார்கள் கடன் - அங்ஙனம் தாங்காது நீங்கிப் போதல் அறிவிலாதவரின் கடமையாகும்; என்று எழுந்து போந்தான் - என்று கூறி எழுந்து பொருளீட்டப் புறப்பட்டான்.
|
|
தலைசாய்க்க வருதீச்சொல் தாங்கல் கடனாகும் என மாறுக. பிறத்தற்கு முன்னர் என வருவித்துரைக்க. இச் செய்யுளோடு,
|
|
|
”சிதலை தினப்பட்ட ஆல மரத்தை |
|
|
மதலையாய் மற்றதன் வீமூன்றி யாங்குக் |
|
|
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற |
|
|
புதல்வன் மறைப்பக் கெடும்.” (நாலடி. 197) |
|
என வரும் நாலடி வெண்பாவை ஒப்பு நோக்குக.
|
|
|
”இற்பிறந்தார் கண்ணேயு மின்மை இளிவந்த |
|
|
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.” (குறள். 1044) |
|
என்பதுபற்றி 'தலைசாய்க்க வருதீச்சொல்' (பிறவாமுன்) என்றான் என்க.
|
( 6 ) |
499 |
மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி |
|
மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற |
|
தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன் |
|
கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான். |
|
(இ - ள்.) மாது படு நோக்கினவர் வாட்கண் வடு உற்ற-பெருமை பொருந்திய நோக்கினையுடைய மங்கையரின் ஒளி தவழுங் கண்கள் தாக்கிய வடுவினைக் கொண்ட; தாடு படு தார் கெழிய தங்கு வரை மார்பன் - தாது பொருந்திய மாலை பொருந்திய நிலைபெற்ற மலைபோலும் மார்பன்; மோதுபடு பண்டம் பெரிது முனியாது ஏற்றி - நிறைந்த பொருள்களை வெறுப்பின்றி மிகுதியாகக் (கலத்தில்) ஏற்றி; கோது படல் இல்ல குறிக்கொண்டு எழுந்து போந்தான் - குற்றம் அற்ற நல்ல பொழுதை அறிந்து கடற்கரைக்கு வந்தான்.
|
|
(வி - ம்.) வாட்கண் வடு ஒளி பொருந்திய கண்களாகியமா வடுக்கள் என்றுமாம். நச்சினார்க்கினியர், 'இவன் மார்பைப் பார்த்தலால் ஒளி மிகுங் கண்கள் மழுங்குமாறு' என்றும், 'வடுஉற்ற கண் தங்கும் மார்பு' என்று ஆக்கி 'மாவடு போன்ற கண் தங்கும் மார்பு' என்றும் பொருள் கூறுவர்.
|
|
மோதுபடு பண்டம் என்றது பண்டகசாலையின் உச்சியில் மோதுதல் உண்டாக மிக்க பண்டத்தை என்க. மாதுபடு நோக்கு என்றற்குக் காதல் தோன்றுதற்கிடமான நோக்கம் எனினுமாம். கெழிய - கெழுவிய; பொருந்திய. கோதுபடலில்லகுறி என்றது, நன்முழுத்தத்தை.
|
( 7 ) |