காந்தருவ தத்தையார் இலம்பகம் |
297 |
|
507 |
களித்தலை மயங்கி யிப்பா |
|
லிருத்தலுங் கலந்தோர் காற்றிற் |
|
றுளித்தலை முகில்க ளீண்டித் |
|
தூங்கிருண் மயங்கி மான்று |
|
விளிப்பது போல மின்னி |
|
வெடிபட முழங்கிக் கூற்று |
|
மொளித்துலைந் தொழிய வெம்பி |
|
யுரறிநின் றிடிப்ப நாய்கன். |
|
(இ - ள்.) இப்பால் களித்தலை மயங்கி இருத்தலும் - இங்கு இவர்கள் களிப்பிலே தம்மை மறந்து இருக்கும்போது; ஓர் காற்றில் துளித்தலை முகில்கள் கலந்து ஈண்டி - ஒரு காற்றிலே நீர்த் துளியை யுடைய கரிய முகில்கள் பரவிச் செறிந்து: தூங்கு இருள் மயங்கி மான்று - பேரிருள் போன்று எத்திசையினுங் கலந்து மயங்கி; விளிப்பது போல மின்னி - கெடுப்பது போல மின்னி; வெடிபட முழங்கி - வெடிப்பது போலச் சிறிது இடித்து; கூற்றும் ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப - (பிறகு) கூற்றுவனும் மறைந்து வருந்தி ஒழியுமாறு வெதும்பி முழங்கி நிலையாக இடிக்க; நாய்கன் - (இந்நிலை கண்ட) நாய்கன்,
|
|
(வி - ம்.) முதலிற் சிறிதே இடித்தது; பிறகு பேரிடி யிடித்தது. இதுவுங் குளகம்.
|
|
களித்தலை என்புழி தலை ஏழனுருபு. துளித்து அலையும் முகில் எனினுமாம். மயங்கி - கலந்து. மான்று - மயங்கி. விளித்தல் - கெடுத்தல். கூற்றும், உம்மை உயர்வு சிறப்பு. உரறி - முழங்கி; யுரறி இடிப்ப என்றது முழங்கி இடிப்ப என்றவாறு.
|
( 15 ) |
508 |
எண்டிசை வளியு மீண்டி |
|
யெதிரெதிர் கலாவிப் பவ்வங் |
|
கொண்டுமே லெழுவ தொப்பக் |
|
குளிறிநின் றதிர்ந்து மேகந் |
|
தண்டுளி பளிக்குக் கோல்போற் |
|
றாரையாய்ச் சொரிந்து தெய்வங் |
|
கொண்டதோர் செற்றம் போலுங் |
|
குலுங்கன்மி னென்று கூறும். |
|
(இ - ள்.) எண் திசை வளியும் ஈண்டி - எட்டுத்திசையிற் காற்றும் ஒருங்கே கூடி; எதிர் எதிர் கலாவி - எதிரெதிராகக் கலந்து; பவ்வம் கொண்டு மேல் எழுவது ஒப்ப - கடலைக்கொண்டு மேலே யெழும் ஊழி யிறுதியை ஒவ்வி நிற்க; மேகம் குளிறி
|
|