காந்தருவ தத்தையார் இலம்பகம் |
301 |
|
கடலினுள் அழுந்தியது, அங்ஙனம் அழுந்தியபொழுது; உள்ளார் ஒருங்கு மாய்ந்தார் - அதன்கண் உள்ளவரெல்லாம் ஒருசேர மறைந்தொழிந்தார்.
|
|
(வி - ம்.) பருமித்தல் - அணிசெய்தல். பையென: குறிப்புமொழி. கவிழ்ந்து நிற்ப என்றது இறைவனைத் தலைவணங்கி நினைந்து நின்றான் என்றவாறு. குருமித்தல் - முழங்குதல். நிருமித்தல் - நினைத்தல்.
|
( 20 ) |
வேறு
|
|
513 |
ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும் |
|
வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான் |
|
கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத் |
|
தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே. |
|
(இ - ள்.) ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும் - பாவத்தை நீக்கித் திரட்டிய செல்வத்தையும் உற்ற அன்புடையாரையும்; வேம்பு உற்ற முந்நீர் விழுங்க - உவர்ப்பினையுடைய கடல்நீர் விழுங்கவும்; விரையாது நின்றான் - கலங்காமல் நின்றவன்; கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் - கூம்பு ஒடிந்த துண்டம் ஒன்றைப் பற்றிக் கிடந்தான்; தேன் பெற்ற பைந்தார் அவனைத் திரை கொழித்து உய்த்தது - தேன் பொருந்திய புதிய மாலையினனாகிய அவனை அலை கொழித்துக் கரையிலே சேர்த்தது.
|
|
(வி - ம்.) அன்று, ஏ: அசைகள்.
|
|
தீவினை செய்யாமல் அறத்தாற்றின் ஈட்டிய பொருள் என்பார் ஓம்பிப் படைத்த பொருள் என்றார். ஓம்புதலாவது,
|
|
|
”வடுவஞ்சி வாய்மொழிந்து |
|
|
தமவும் பிறவும் ஒப்பநாடிக் |
|
|
கொள்வதூஉ மிகைகொளாது |
|
|
கொடுப்பதூஉம் குறைகொடாது” (பட். 208 - 211) |
|
வாணிகஞ் செய்தல் என்க.
|
|
சீதத்தன் தான் கூறியதற்கிணங்கவே இடுக்கணழியாது நின்றான் என்பார் விரையாது நின்றான் என்றார்.
|
( 21 ) |
514 |
நாவா யிழந்து நடுவாருமி |
|
லியாம நீந்திப் |
|
போவாய் தமியே பொருளைப் பொரு |
|
ளென்று கொண்டாய் |
|