காந்தருவ தத்தையார் இலம்பகம் |
307 |
|
கள் பரவிய சந்தனச் சோலையுடன் பார்த்து; இனி தின் உவந்தான் - இனிமையாலே மனம் மகிழ்ந்தான்.
|
|
(வி - ம்.) இதனால், சீதத்தன் கலையுணர்ச்சி உடையனாதல் கூறப்பட்டது.
|
( 32 ) |
525 |
கோதை யருவிக் குளிர்வரை மேனின்று |
|
காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி |
|
னாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப் |
|
போது மெழுகெனப் போயினர் சார்ந்தார். |
|
(இ - ள்.) கோதை அருவிக் குளிர்வரைமேல் நின்று - மலர்மாலைபோல ஒழுகும் அருவியையுடைய குளிர்ந்த மலைமேலிருந்து; காதம் கடந்தபின் - காதவழி சென்றால்; கன்னிக் கொடிமதில் நாதன் உறைவது ஓர் நலநகர் உண்டு - அழிவற்ற கொடியையுடைய மதில் சூழ்ந்த இறைவன் வாழும் ஓர் அழகிய கோயில் உண்டு; அங்குப் போதும் எழுக என - அங்கே செல்வோம் எழுக என்று கூற; போயினர் சார்ந்தார் - அங்கே சென்று அடைந்தார்.
|
|
(வி - ம்.) முன் 'வரையளவு' என்றான். ஆதலால், இப்போது 'நன்னகரைக் காணப்போதும்' என மேலுங் கூறினான். நகர் எனவே அருகன் கோயில் என்று சீதத்தன் கருதியதாக நச்சினார்க்கினியர் உரைப்பர்.
|
|
கோதை யருவி - கோதை போன்ற அருவி, குளிர்வரை: வினைத்தொகை. அவன் விரும்பி வருதற்பொருட்டு அரசன் என்னாது நாதன் கோயில் என்றான். நாதன் கோயில் என்றது இறைவன் திருக்கோயிலையும் குறிக்குமாகலின் என்க. போதும்: தன்மைப் பன்மை. கன்னிமதில் கொடிமதில் எனத் தனித்தனிக் கூட்டுக
|
( 33 ) |
வேறு
|
|
526 |
மேகமே மிடைந்து தாழ |
|
விருள்கொண்ட வெள்ளிக் குன்ற |
|
மாகத்து விளங்கித் தோன்றும் |
|
வனப்புநாம் வகுக்க லுற்றா |
|
னாகந்தான் கரிய தொன்று |
|
கீழ்நின்று நடுங்கக் கவ்விப் |
|
பாகமே விழுங்கப் பட்ட |
|
பான்மதி போன்ற தன்றே. |
|
(இ - ள்.) தாழ மேகமே மிடைந்து இருள்கொண்ட வெள்ளிக் குன்றம் - தாழ்வரை யெல்லாம் மேகமே நெருங்கி
|
|