பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 341 

  ”மதவே மடனும் வலியு மாகும்.”  
  ”மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.” (உரி. 79-80)  

   என்பது தொல்காப்பியம்.

( 97 )
590 நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன்
வானக்கிடு மாட்சியதோர் மண்டபங்செய் கென்ன
மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசயை பக்கம்
கானத்திடை வேங்கையெழக் கண்ணினர்கள் அன்றே.

   (இ - ள்.) நானக் கிடங்கு ஆடை நகர் நாகத்திடை - நானக்கிடங்கை ஆடையாகவுடைய நகராகிய துறக்கத்தின் நடுவே; நன்பொன் வான் நக்கிடும் மாட்சியது - நல்ல பொன்னையுடைய வானை நகைத்திடும் அழகினையுடைய தாகிய; ஓர் மண்டபம் செய்க என்ன - ஒரு மண்டபத்தைச் செய்க என்று கூறினான் ஆக; வெள்ளிக்கிழமை சயை பக்கம் மீனத்து இடைநாள் கானத்திடை வேங்கை யெழ - வெள்ளிக்கிழமையும், திருதியையும் பெற்ற உத்திரட்டாதிநாள் சிங்கம் உதயமாகக் கணிகள் முழுத்தம் குறித்தனர்.

 

   (வி - ம்.) நானம் - புழுகு; குளித்தலாற் புழுகுடைத்தாயிற்று. 'வான் நக்கிடும்' என்பதற்கு 'வானைத் தீண்டும்' என்றும் பொருள் கொள்க. பூரட்டாதியின் நாலாங்காலும் உத்திரட்டாதியும் இரேவதியும் மீன ராசியாதலால், உத்திரட்டாதி நடுநாளாதலால், 'மீனத்திடைநாள்' என்றார். திருதியை, அட்டமி, திரயோதசி என்பவற்றில் திருதியை சிறத்தலின், 'சயை பக்கம்' என்றார். மேடத்தின் முற்கூறு மேடராசியின் கூறு; இரண்டாங் கூறு சிங்கராசியின் கூறு; மூன்றாங் கூறு தனுராசியின் கூறு. ஆதலால், மேடத்தின் நடுக்கூற்றைச் சிங்கத்தின் உதயமாக விதித்தார். இது கூறிற்று, சிங்கத்தே பிரகஸ்பதியாதலின். வெள்ளி முதல் வியாழ மீறாகக் கிழமை ஏழாயவாறும், உத்திரட்டாதி முதல் உரோகிணி யீறாக நாள் ஆறாயவாறும் கூடுமாறு என்னையெனின், இத் திங்களிற் சதயம் முதல் ஆயிலியத்தளவும் சந்திரன் வர்த்தித்து வருதலின், வியாக்கிழமைக்கு உரோகிணி கூடிற்று. இதனானே, மேல், 'ஒண்ணிற வுரோணியூர்ந்த ஒளிமதி ஒண்பொன் ஆட்சி' (சீவக. 620) என்று வியாழக்கிழமையிலும் சிறிது நாழிகை உரோகிணியாகக் கூறினார்.

 

   சயை, திருதியை, அட்டமி திரயோதசி என்பன. இவற்றுள் ஈண்டுச் சிறப்புப்பற்றித் திருதியை மட்டுமே உணர்த்தி நின்றது

( 98 )
591 நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி
பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு கான
மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம
லொட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார்.