(வி - ம்.) பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நான்கினும் பத்தொன்பது நரம்புகளையுடைய மகரயாழே தத்தை பயில்வது என்பது தோன்ற, 'மகரவீணை' என்றார். 'ஒன்றும் இருபதும் ஒன்பதும் பத்துடனே, நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத, நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே - மேல் வகைய நூலோர் விதி' என்பதனால் முறையே 21, 19, 14, 7 - என நரம்பு கொள்க. [அரசர், அந்தணர் வணிகர் என்னும் மூவகைக் குலத்துளாரினும் என்பார் நச்சினார்க்கினியர். அரசர் ஆதி என்பதனால் அவள் அரசகுலமாகையால் அரசரை முற்கூறினார் என்றாலும் அங்ஙனங்கொள்வது சாலுமா என்பது சிந்திக்கத் தக்கது]. குலத்துளார்க்கு - குலத்துளாரில், (உருபு மயக்கம்),
|
( 116 ) |