பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 352 

   நிணம் கொழுங்குருதி வாள்கை - தப்பாத நிணம் பொருந்திய குருதியையுடைய வாளேந்திய கையையும்; நிலம்புடை பெயர்க்கும் ஆற்றல் - நிலத்தைப் புடைபெயர்க்கும் ஆற்றலையும்; அணைப்பருங் களிகொள் வேழத்து - தடுத்தற்கரிய மதமுடைய வேழத்தினையும் உடைய; அத்தினபுரத்து வேந்தன் - அத்தினபுரியின் மன்னன்; கணைகவின் அழித்த உண்கண் கன்னியைக் கருதி வந்தான் - அம்பின் அழகை அழித்த மைதீட்டிய கண்களையுடைய தத்தையை மணக்க நினைத்து வந்தான்.

( 118 )
611 சிதைப்பருஞ் சீற்றத் துப்பின்
  செய்கழ னரல வீக்கி
மதக்களி றடர்த்துக் குன்ற
  மணிவட்டி னுருட்டு மாற்றற்
கதக்களி யொளிறு வைவேற்
  காம்பிலிக் காவல் மன்னன்
பதைப்பரும் பரும யானைப்
  பாலமா குமரன் வந்தான்.

   (இ - ள்.) சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின் - பகைவரால் மாற்றற்கரிய வலிமையாலே; செய்கழல் நரல வீக்கி - புனைகழலை ஒலிக்கக் கட்டி; மதக் களிறு அடர்த்து - மதயானையை அடக்கி; குன்றம் மணிவட்டின் உருட்டும் ஆற்றல் - குன்றை அழகிய வட்டினைப்போல உருட்டும் மெய் வலியையும்; ஒளிறு வைவேல் - விளங்கும் கூரிய வேலினையும்; கதக் களி பதைப்பு அரும் பருமயானை - சினக் களியாற் பகைக்கு அஞ்சிப் பதைத்து ஓடுதல் இல்லாத யானையினையும் உடைய;' காம்பிலிக் காவல் மன்னன் பாலகுமரன் வந்தான் - காம்பிலி நாட்டைக் காவல்செய்யும் வேந்தனாகிய பாலகுமரன் வந்தான்.

 

   வி-ம்.) பால மா குமரன் : மா : இசை நிறைத்தது. 'கதக் களி' என்பதைப் 'பதைப்பரும் பரும யானை' என்பதன் முன் இயைக்க.

( 119 )
612 இலைபொர வெழுதி யன்ன
  வெரிமணிக் கடக முன்கைச்
சிலைபொரத் திரண்ட திண்டோட்
  சில்லரிச் சிலம்பி னார்த
முலைபொர வுடைந்த தண்டார்
  மொய்ம்மதுத் துளிப்ப வந்தான்
மலைபொர வரிய மார்பின்
  வாரண வாசி மன்னன்.