காந்தருவ தத்தையார் இலம்பகம் |
356 |
|
618 |
மண்டல நிறைந்த மாசின் |
|
மதிப்புடை வியாழம் போன்றோர் |
|
குண்டல மிலங்க நின்ற |
|
கொடியினைக் குறுகித் தோழி |
|
விண்டலர் கோதை விம்மும் |
|
விரைகுழ றொழுது நீவிப் |
|
பண்டியல் மணங்க ளெல்லாம் |
|
பரிவறப் பணிந்து சொன்னாள். |
|
(இ - ள்.) மண்டலம் நிறைந்த மாசுஇல் மதி புடை வியாழம் போன்று - வட்டம் நிறைந்த குற்றம் அற்ற திங்களின் அருகே வியாழனைப் போன்று; ஓர் குண்டலம் இலங்க நின்ற கொடியினைக் குறுகித்தொழுது (தன் முகத்தருகே) ஒப்பில்லாத குண்டலம் விளங்க நின்ற தத்தையைக் குறுகிநின்று வணங்கி; விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் நீவி - விரிந்து மலர்ந்த மாலையின் பொங்கும் மணமுடைய கூந்தலைக் கோதி; பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அறப் பணிந்து தோழி சொன்னாள் - பண்டைக் காலத்தே உலகில் நடைபெற்றுவரும் எண்வகை மணங்களையும் வருத்தமின்றி யுணர வணக்கத்துடன் வீணாபதி கூறினாள்.
|
|
(வி - ம்.) விரைக்குழல் விரைகுழலென்றாயது விகாரம் :
|
|
பண்டியல் மணங்களாவன : - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம். பைசாசம் என்பன. இங்ஙனம் கூறுதல் ஒரு மரபு எனக் கொள்க.
|
( 126 ) |
619 |
எரிமணி நெற்றி வேய்ந்த |
|
விளம்பிறை யிதுகொ லென்னப் |
|
புரிமணி சுமந்த பொற்பூண் |
|
பொறுக்கலா நுசுப்பிற் பாவை |
|
திருமணி வீணைக் குன்றத் |
|
திழிந்ததீம் பாலை நீத்தத் |
|
தருமுடி யரச ராழ்வ |
|
ரம்மனை யறிவ லென்றாள். |
|
(இ - ள்.) எரிமணி நெற்றி வேய்ந்த இளம்பிறை இது கொல் என்னப் புரிமணி சுமந்த பொன்பூண் - 'ஒளிவிடும் மணியை இருதலையினும் அழுத்தியதொரு பிறையோ இது?' என்னுமாறு முத்து வடங்கள் இருதலையினு மணியைச் சுமந்த பொற்பூணினை; பொறுக்கலா நுசுப்பின் பாவை - பொறுக்க
|
|