காந்தருவ தத்தையார் இலம்பகம் |
361 |
|
(வி - ம்.) பூசி - பூச : வினையெச்சத் திரிபு.
|
|
இருஞ்சிலை என்றது வானவில்லை. இது முத்துவடத்திற்குவமை. சிறுபுறம் - முதுகு. ஐதா - மென்மையாக. ஐதாக எனல் ணேடியது ஈற்றுக் ககரம் கெட்டு நின்றது. விரிமணி வியப்ப என்புழி மணி - மாணிக்கமணி. வியப்ப : உவமவுருபு.
|
|
|
”இதுமெயென் றின்றுந் தேறார் இருநிலத் துறையு மாந்தர் |
|
|
புதுமையைப் பொருளி தென்னார் பழமையைப் பொருளிதென்பர் |
|
|
மதுமய மாலைத்தோழி பழமையைப் பழித்து மாதோ |
|
|
புதுமையே பொருளிதாதல் பூங்கண்ணி னுணர்த்தி னாளே” |
|
என ஒரு செய்யுள் சில கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றது.
|
( 133 ) |
626 |
அருங்கயம் விசும்பிற் பார்க்கு |
|
மணிச்சிறு சிரலை யஞ்சி |
|
இருங்கயந் துறந்து திங்க |
|
ளிடங்கொண்டு கிடந்த நீலம் |
|
நெருங்கிய மணிவிற் காப்ப |
|
நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் |
|
கருங்கய லல்ல கண்ணே |
|
எனக்கரி போக்கி னாரே. |
|
(இ - ள்.) நீண்டு உலாய் பிறழ்வ - நீண்டு உலவிப் பிறழ்கின்ற இவை; அருங்கயம் விசும்பின் பார்க்கும் - அரிய குளத்தில் விசும்பிலிருந்து (தம்மை) நோக்கும்; அணிச் சிறு சிரலை அஞ்சி - அழகிய சிறிய சிச்சிலிக்கு அஞ்சி ; இருங் கயம் துறந்து - அந்தப் பெரிய குளத்தை நீங்கி; திங்கள் இ டம் கொண்டு - திங்களை இடமாகக் கொண்டு; நீலம் மணி நெருங்கிய வில்காப்ப - நீலமணியாகிய நெருங்கிய வில்காப்ப; கிடந்த - கிடக்கின்ற; கருங்கயல் அல்ல - கரிய கயல்மீன்கள் அல்ல; கண்ணே எனக் கரி போக்கினார் - கண்ணேயென்று கண்டோர் கருதுமாறு மையை எழுதினார்.
|
|
(வி - ம்.) 'கரி' என்றார் சான்று போலவும் தோன்ற. 'கிடந்து' என்றும் பாடம்.
|
|
விசும்பினின்று பார்க்கும் என்க. சிரல் - மீன் கொத்திப் பறவை. இருங்கயம் என்பது சுட்டுமாத்திரையாய் நின்றது. சிரலை அஞ்சி என்றதற்கேற்ப வில் காப்ப என்றார்.
|
( 134 ) |
627 |
பொருந்துபொற் றூண்கள் நான்கிற் |
|
பொலிந்துநூற் புலவர் செந்நா |
|
வருந்தியும் புகழ்த லாகா |
|
மரகத மணிசெய் கூடத் |
|