|
இம் மூன்றும் (648 - 50) ஒருபொருண்மேல் மூன்றடுக்கித் தாழம்பட்ட ஓசை பெற்று வந்த கொச்சக வொருபோகு. ஒருபோகென்பது பண்புத் தொகைப் புறத்தன்மொழி. இது, 'தரவின்றாகி' (தொல். செய். 149) என்னுஞ் சூத்திர விதி. இசை நூலோர் முகம், நிலை, முரி என்பனவற்றில் நிலை யென்பர் இதனை. [இனி இசை நூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம், நிலை, கொச்சகம், முரி என வேண்டுப. கூத்த நூலார் கொச்சகம் உள்வழி அதனை நிலைபெற அடக்கி முகம், நிலை, முரி யென மூன்றாக வேண்டுப. (தொல். செய். 132. பேர்)]; 'இனி, இசைத் தமிழில் வருங்கால் முகநிலை, கொச்சகம், முரி என்ப ஒருசாராசிரியர்' (சிலப். 6 : 35. அடியார்.)
|
|