| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
384 |
|
|
காமர் பங்கயப் பழனம் ஒத்தார் - வாடைக் காற்றுப் பொருதலாலே கருகிய அழகிய தாமரைப் பழனத்தைப் போன்றார்.
|
|
|
(வி - ம்.) வாலரக்கு என்றது சாதிலிங்கத்தை. நூல் - இசை நூல். நுண்ணூல் என்றது பூணூலை. பூணூல் பூண்பதில் இவர் வல்லுநரே ஆயினும் இசை நூலில் இவர் தத்தையை வெல்வதெங்ஙனம் என்பார் நுண்ணூல் வணிகரும் தொலைந்துபோனார் என்றார்.
|
( 171 ) |
| 664 |
தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளைவெல்வான் |
| |
வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமனாகு |
| |
மூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான் |
| |
கானுய ரலங்கன்மாலைக் கட்டியங் கார னன்றே. |
|
|
(இ - ள்.) கான் உயர் அலங்கல் மாலைக் கட்டியங்காரன் - மணம் மிகுந்த அலங்கலாகிய மாலையை உடைய கட்டியங்காரன் என்பவன்; தேன்உயர் மகர வீணைத் தீஞ்சுவை இவளை வெல்வான் - இனிமையிலே மேம்பட்ட மகர வீணையின் இன்சுவையாலே இவளை வெல்கிறவன்; வான் உயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காமன் ஆகும் - வானவரின் உயர்ந்த அறிவைக் கெடுக்கின்ற நீண்ட வில்லையுடைய காமன் ஆவான்; ஈங்கு இல்லை - இங்கே யில்லை; (ஆகையால்) ஊன் உயர் நுதிகொள் வேலீர் - ஊனைக் கொண்டுயர்ந்த நுனியையுடைய வேலினீர்!; ஒழிக என்றான் - (இவளொடு பொருவதை) விடுக என்றுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) தேனுயர் வார்சிலை எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
|
|
இதன்கண் கட்டியங்காரன் தத்தையை அரசருள் எவரேனும் வென்று கைக்கொள்ளுவரோ என்று அஞ்சிக் கிடந்து ஒருவரும் வெல்லாமையுணர்ந்த பின் தன்னுள்ளே மகிழ்ந்து கூறும் அவன் மனநிலைதெற்றெனப் புலப்படும்படி தேவர் புலப்படுத்தியிருந்தல் நுண்ணிதின் உணர்க. ”எல்லோருஞ் செத்தால் வாழ்ந்தது போலே” என்பதொரு பழமொழி
|
( 172 ) |
| 665 |
மறுமுயற் கிவர்ந்த வேக |
| |
மாசுண மடையப் பட்ட |
| |
நிறைமதி போன்று மன்னர் |
| |
ஒளிகுறைந் துருகி நைய |
| |
வறுபகல் கழிந்த பின்றை |
| |
யந்நகர்க் காதி நாய்கன் |
| |
சிறுவனோர் சிங்க வேற்றை |
| |
சீவக சாமி யென்பான், |
|