பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 400 

686 தேனுடைந் தொழுகுஞ் செவ்வித்
  தாமரைப் போது புல்லி
யூனுடை யுருவக் காக்கை
  யிதழுகக் குடைந்திட் டாங்குக்
கானுடை மாலை தன்னைக்
  கட்டியங் காரன் சூழ்ந்து
தானுடை முல்லை யெல்லாந்
  தாதுகப் பறித்திட் டானே.

   (இ - ள்.) உடைந்த தேன் ஒழுகும் செவ்வித் தாமரைப் போது புல்லி - அரும்பலர்ந்து தேன் பெருகும் செவ்வியிலுள்ள தாமரை மலரைத் தழுவி் ; ஊன் உடை உருவக் காக்கை இதழ் உகக் குடைந்திட்டாங்கு - ஊன் வற்றிய உருவமுள்ள காக்கை அதன் இதழ்கள் விழுமாறு குடைந்திட்டாற் போல; கான் உடைமாலை தன்னைக் கட்டியங்காரன் சூழந்து - மணமிகும் அனங்கமாலையைக் கட்டியங்காரன் முற்றுகை செய்து; தான் உடை முல்லை யெல்லாம் தாது உகப் பறித்திட்டானே - அவளுடைய முல்லையை யெல்லாம் தாதுகள் சிதறப் பறித்து விட்டான்.

 

   (வி - ம்.) ஊன் வற்றிய உருவக் காக்கை - வயது முற்றிய வலியற்ற காக்கை; கட்டியங்காரனின் முதுமையைக் குறிக்கிறது. அல்லது ஊனை உடைக்கும் உருவக் காக்கை என்றும் கூறலாம். முல்லை - கற்பு. இதனாற் புணரும் நெறியறியாமை கூறினார்.

( 194 )
687 கலையினிற் கன்னி நீக்கித்
  தாமரைக் கண்க டம்மான்
முலையினி லெழுதிச் செவ்வாய்
  பயந்ததேன் பருகி முள்கும்
சிலைவலாய் புல்லு நம்பி
  சீவக சாமியோ என்
றலைகடற் புலம்பி னோவா
  தரற்றுமா லணங்கி னன்னாள்.

   (இ - ள்.) கலையினில் கன்னி நீக்கி - மேகலையிடத்து அழிவின்மையை நீக்கி; தாமரைக் கண்கள் தம்மால் - தாமரை மலரனைய கண்களால்; முலையினில் எழுதி - முலைகளில் எழுதி; செவ்வாய் பயந்த தேன் பருகி - செவ்வாய் ஈந்த தேனைப் பருகி; முள்கும் சிலைவலாய்! - முயங்கும் சிலைவல்லானே; சீவகசாமியோ! - சீவகசாமியோ!; நம்பி! - நம்பியே!; புல்லு என்று - தழுவிக்கொள்